பணம் பதுக்குபவர்களுக்கு இன்று கருப்பு தினம் தான் - காங்கிரஸை தெறிக்கவிட்ட சத்தீஸ்கர் சி.எம்...
பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கும், கருப்பு பணத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டும் தான் இன்று கருப்பு தினம் என்றும், நாட்டில் உள்ள மக்களுக்கு இன்று கொண்டாட்ட தினம் என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங் கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு தினமான நவம்பர் 8 ஆம் தேதியை காங்கிரஸ் கட்சியினர் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்திலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கும், கருப்பு பணத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டும் தான் இன்று கருப்பு தினம் என்றும், நாட்டில் உள்ள மக்களுக்கு இன்று கொண்டாட்ட தினம் என்றும் தெரிவித்துள்ளார்.