ஹரியானாவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களை அரக்கர்கள் என்று அழைத்தார். இது பாஜகவினரிடம் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ரந்தீப் சுர்ஜேவாலா, ஞாயிற்றுக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

“குறைந்தபட்சம் வேலையில் உட்கார வாய்ப்பு கொடு. பாஜக மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அரக்கர்கள். பாஜகவுக்கு வாக்களித்து அவர்களை ஆதரிப்பவர்களும் அரக்கர்கள் தான். இன்று நான் இந்த மகாபாரத பூமியிலிருந்து சபிக்கிறேன் என்று ரன்தீப் சுர்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை ஹரியானா மாநிலம் கைதலில் காங்கிரஸ் ‘ஜன் ஆக்ரோஷ்’ பேரணியில் உரையாற்றும் போது கூறினார்.

இதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இளவரசரை மீண்டும் மீண்டும் துவக்கி வைக்க தவறிய காங்கிரஸ் கட்சி, இப்போது பொதுமக்களை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

Scroll to load tweet…

பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பாராமுகத்துக்கு ஆளான காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா சொல்வதைக் கேளுங்கள். பாஜகவுக்கு வாக்களித்து ஆதரிக்கும் நாட்டு மக்கள் ‘அரக்கர்கள்” என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!