காலேஜில் பண்ணிய ‘தில்லாலங்கடி’ வேலை…! பாஜக எம்எல்ஏவுக்கு 5 வருஷம் ஜெயில்..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்லூரியில் சேர போலி சான்றிதழ் கொடுத்த பாஜக எம்எல்ஏவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்லூரியில் சேர போலி சான்றிதழ் கொடுத்த பாஜக எம்எல்ஏவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
உ.பியில் கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ இந்திரபிரதாப் திவாரி. 1990ம் ஆண்டு சாகேட் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பின் போது தேர்ச்சி அடையவில்லை. ஆனால் அவரோ படுபுத்திசாலித்தனமாக டூப்ளிகேட் மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு 3ம் ஆண்டில் சேர்ந்திருக்கிறார்.
அவரின் இந்த மோசடியை அறிந்த கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. 28 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் தற்போது இந்திரபிரதாப் திவாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.