புதுடெல்லி, நவ. 16-

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.46 காசுகளும், டீசல் ரூ.1.53 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, பெட்ரோல் விலை 6 முறை உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டீசல் விலை தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடைசியாக கடந்த 1-ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 0.89 காசுகளும், டீசல் 0.86 காசுகளும் உயர்த்தப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் ரூ.7.53 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1.46 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் கடந்த 3 முறையில் ரூ.3.90 காசுகள் உயர்த்தப்பட்டு தற்போது, ரூ.1.53 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இனி டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.65.93 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ரூ.54.71 காசுகளுக்கும் விற்கப்படும்.