Asianet News TamilAsianet News Tamil

சாலையில் தறிகெட்டு ஓடிய கார் - பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

5 people death for car accident in uttarpradesh
5 people death for car accident in uttarpradesh
Author
First Published Feb 2, 2018, 12:53 PM IST


உத்திரபிரதேசத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி பின்னர் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்திரபிரதேசம் லக்னோ நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் சைக்கிளில் குறுக்கே வந்துள்ளார். 

அப்போது அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதில் தாறுமாறாக ஓடிய  கார் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கமாக மோதி பின்னர் மரத்தின்மீது மோதியது. 

இதில் காரின் முன்புறம் முழுவதுமாக சேதமடைந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் மற்றும் பாதசாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 3 படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios