Asianet News TamilAsianet News Tamil

1917 - இந்து-ஜெர்மன் சதி வழக்கு ; இந்திய சுதந்திர இயக்கத்தின் அறியப்படாத அத்தியாயம்

India 75 : பிரிட்டிஷ் - அமெரிக்க உளவுத்துறை இந்த திட்டத்தைப் பற்றி கண்டுபிடித்து, கப்பலை இடைமறித்து, சந்திரகாந்த் சக்ரவர்த்தி, பண்டிட் ராம் சந்திரா, ராம் சிங் போன்ற கதர் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல ஜெர்மன் தூதரக அதிகாரிகள் உட்பட பல அமைப்பாளர்களை கைது செய்தது. 

Hindu German Conspiracy case of 1917 a largely unknown chapter of the India freedom movement
Author
First Published Jun 21, 2022, 10:48 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கதர் கட்சியும், ஜெர்மனியைச் சேர்ந்த இந்திய தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட இந்திய சுதந்திர லீக் அமைப்பும் இந்த சதியின் பின்னணியில் இருந்தது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் ஒரே நேரத்தில் தொடர்ச்சியான குண்டு வெடிப்பு நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. இது இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும், பிரிட்டனின் பிடிவாதத்திற்கும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட்டது.  

Hindu German Conspiracy case of 1917 a largely unknown chapter of the India freedom movement

இந்த திட்டத்திற்கு ஜெர்மனி, ஜப்பான், சீனா, துருக்கி, ரஷ்ய போல்ஷிவிக்குகள் மற்றும் ஐரிஷ் புரட்சியாளர்களின் பிரிட்டிஷ் எதிர்ப்பு அரசாங்கங்களின் ஆதரவு இருந்தது. ஜெர்மனியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பணமும் ஆயுதங்களும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் பிரிட்டிஷ் - அமெரிக்க உளவுத்துறை இந்த திட்டத்தைப் பற்றி கண்டுபிடித்து, கப்பலை இடைமறித்து, சந்திரகாந்த் சக்ரவர்த்தி, பண்டிட் ராம் சந்திரா, ராம் சிங் போன்ற கதர் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல ஜெர்மன் தூதரக அதிகாரிகள் உட்பட பல அமைப்பாளர்களை கைது செய்தது. 

1917 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் இந்துக்கள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மானியர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நபர்கள் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு விசாரணையின் கடைசி நாள் நீதிமன்றத்திற்குள் பல்வேறு வியத்தகு நிகழ்வுகள் நடைபெற்றது. கதர் கட்சியின் தலைவர் பண்டிட் ராம் சந்திர பரத்வாஜை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி, கதர் தலைவர் ராம் சிங் சுட்டுக் கொன்றார். 

Hindu German Conspiracy case of 1917 a largely unknown chapter of the India freedom movement

நீதிமன்றத்தில் இருந்த அமெரிக்க போலீஸ் அதிகாரி உடனடியாக சிங்கை சுட்டுக் கொன்றார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றனர். ஆனால் தீவிரவாதிகள் மீதான அமெரிக்க மக்களின் அனுதாபத்தைத் தொடர்ந்து தங்களால் விசாரிக்கப்படும் அனைத்து குற்றவாளிகளையும் நாடு கடத்துவதற்கான பிரிட்டனின் கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios