கிடு, கிடுவென உயர்ந்த இஞ்சி விலை... அதிரடியாக குறைந்த தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை என்ன.?
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது தினந்தோறும் மாறி வருகிறது. அந்த வகையில் உச்சத்தில இருந்த தக்காளி விலை சரிவை நோக்கியும், விலை குறைவாக இருந்த இஞ்சி விலை உச்சத்தை நோக்கியும் செல்கிறது.
காய்கறி விலை உயர்ந்ததா.? சரிந்ததா.?
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலையானது இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரட் விலை என்ன.?
இதே போல நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
vegetable price hike
கத்தரிக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உச்சத்தில் இருந்த தக்காளி விலை ஆனது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி , இஞ்சி விலை என்ன.?
அதே நேரத்தில் தரம் உயர்ந்த தக்காளியானது 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது இஞ்சியின் வரத்து குறைவாக இருப்பதால் விலையானது கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரமாக 150 முதல் 200 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சியானது இன்று 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே நேரத்தில் ஈர இஞ்சியை பொருத்தவரை 70 ரூபாய் 100 ரூபாய் 150 ரூபாய் என்று ரகங்களிலும் விற்பனையாகிறது