MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்..! கரூரில் கண் கலங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி.!

விஜய் உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்..! கரூரில் கண் கலங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி.!

கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.

1 Min read
Raghupati R
Published : Sep 28 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் பற்றி உதயநிதி ஸ்டாலின்
Image Credit : Asianet News

விஜய் பற்றி உதயநிதி ஸ்டாலின்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து கரூர் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை கூறினார்.

24
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Image Credit : Asianet News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிறகு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, “கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது. நெரிசலில் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்கக்கூடாது. கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை.

Related Articles

Related image1
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு.. நடிகர் விஜய் அறிவிப்பு
Related image2
விஜய் வீட்டில் குவிந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்..! நீலாங்கரையில் பரபரப்பு..!
34
கரூர் துயர சம்பவம்
Image Credit : ANI

கரூர் துயர சம்பவம்

இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உறுதுணையாக இருப்போம். ஓய்வுப்பெற்ற நீதியரசர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் படி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை.

44
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Image Credit : Asianet News

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு. உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும்.நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அரசு அவர்களுக்கு துணை நிற்கும்” என்று பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினருடன் கரூர் அரசு மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உதயநிதி ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved