- Home
- Tamil Nadu News
- 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.! யாருக்கெல்லாம் தகுதி.? விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
Tamil scholars : தமிழக அரசு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. தகுதியுள்ள மூத்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நவம்பர் 17, 2025 வரை வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்து வரும் தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான “அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை” திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கு சிறப்பான பங்களிப்பு செய்த மூத்த தமிழறிஞர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வான ஒவ்வொரு தமிழறிஞருக்கும் ரூ.8,000/- உதவித்தொகை வழங்கப்படும். தமிழறிஞர்கள் மறைவுக்கு பின் அவர்களின் மனைவி அல்லது திருமணமாகாத மகள், விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும், 3,000 ரூபாய் வழங்கப்படும். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 100 வயதுக்கு மேற்பட்ட தமிழறிஞர்களும், 150 ஆண்டுகள் வரை சிறப்பாக தமிழ் பண்பாட்டை பரப்பியவர்களும் பரிசீலிக்கப்படுவர்.
விண்ணப்பங்கள் இணைய வழியாகவும் நேரிலுமாகவும் பெறப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க www.tamilvalarchithurai.tn.gov.in/agavai என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். மேலும், மாவட்டத் தமிழ் வளர்ச்சி துறை அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரை சான்று, இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாரிசு சான்று இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு, 2025 ஜன., 1ல், 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய், 1,20,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்றுவரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 17.11.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து மூத்த தமிழறிஞர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ் வளர்ச்சி துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது, தமிழக அரசின் மூத்த குடிமக்கள் நலனில் ஒரு முக்கியமான முயற்சியாகும்.