MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஹோலி பண்டிகை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மதுரை தெற்கு ரயில்வே!

ஹோலி பண்டிகை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மதுரை தெற்கு ரயில்வே!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Mar 05 2025, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தென் மாநிலங்களில் தங்கி இருக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரே நேரத்தில் அதிக மக்கள் பயணிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 
 

25
Sexual assault in train

Sexual assault in train

அதாவது கன்னியாகுமரி - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரயில் மும்பையில் இருந்து வருகிற 10 மற்றும் 17-ம் தேதி திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். 

35

மறுமார்க்கத்தில் இந்த ரயில், கன்னியாகுமரியில் இருந்து 11-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2.15 கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சென்று சேரும்.

45

இந்த ரயில் தாதர், தானே, கல்யாண், லோனா வாலே, புனே, சோலாப்பூர், கலாபர்கி, வாடி, கிருஷ்ணா, ரெய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அடோனி, குண்டக் கல், கூட்டி, தாடி பத்திரி, எர்ர குண்ட்லா, கடப்பா, ராஜம் பேட்டா, ரேணி குண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

55
Train engine

Train engine

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகளும், 9 குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு 2-ம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதுரை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved