MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உஷார்! அலறியபடி எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உஷார்! அலறியபடி எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jan 24 2025, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
School Student

School Student

தமிழகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயாக்கப்பட்ட பிறகு பல்வேறு மோசடி தொடர்பான செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பணத்தை இழந்த பொதுமக்களே அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

25
students scholarship fraud

students scholarship fraud

குறிப்பாக எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுகள் மற்றும் வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

35
Scam Alert

Scam Alert

இந்நிலையில், இதனை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக மோசடி கும்பல்  அறிமுகம் இல்லாத மொபைல் எண்ணில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புக் கொண்டு மாணவியின் மற்றும் பெற்றோரின் பெயரை சரியாக கூறி உங்கள் மகளுக்கு உதவித்தொகை வந்துள்ளதாகவும் அதனை ஜி பே, போன் பேவில் அனுப்புவோம் எனவும் வங்கி கணக்கின் விவரத்தையும் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

45
school education department

school education department

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போனில் அழைத்து கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, வங்கி கணக்கு மற்றும் ஒடிபி கேட்கும் நபர்களை நம்ப வேண்டாம். 

55
scholarship scam alert

scholarship scam alert

அரசு பள்ளிகளில் வழங்கும் கல்வி உதவித்தொகையானது எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஜி பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் உதவித்தொகை அனுப்பப்படாது. எனவே ஜி பே, போன் பேயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உதவித்தொகை
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved