MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10ம் வகுப்பு மாணவனுடன் எஸ்கேப்! ரூம் போட்ட 40 வயது லலிதா! கதறும் அளவுக்கு கோர்ட் கொடுத்த தீர்ப்பு!

10ம் வகுப்பு மாணவனுடன் எஸ்கேப்! ரூம் போட்ட 40 வயது லலிதா! கதறும் அளவுக்கு கோர்ட் கொடுத்த தீர்ப்பு!

திருவாரூரில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அங்கன்வாடி ஊழியரான லலிதா என்பவருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் திருவாரூர் மகளிர் நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. 

1 Min read
vinoth kumar
Published : Nov 07 2025, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்த தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா (40). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை நைசாக பேசி ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ரூம் எடுத்து தங்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

24
Image Credit : our own

மகனை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பள்ளி மாணவனுடன் இருந்த லலிதாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Articles

Related image1
இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Related image2
நெருங்கும் பேராபத்து! இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! இந்திய வானிலை மையம் அதிர்ச்சி!
34
Image Credit : stockPhoto

இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4 பிரிவுகளின் கீழ் குறிப்பிட்ட ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

44
Image Credit : Getty

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளி லலிதாவை திருச்சி பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த லலிதா கதறி அழுதார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
குற்றம்
நீதிமன்றம்
பெண்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved