MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இந்த தப்பை மட்டும் ஆசிரியர்கள் செய்தால் 4 நாட்களில் இடைநீக்கம்! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

இந்த தப்பை மட்டும் ஆசிரியர்கள் செய்தால் 4 நாட்களில் இடைநீக்கம்! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்களைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : May 03 2025, 10:55 AM IST| Updated : May 03 2025, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu School Student

Tamilnadu School Student

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை, மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல்,  சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை,  திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, ஒசூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது. 

25
tamilnadu government

tamilnadu government

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவ்வப்போது சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாணவிகளின் நலன் கருதி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்: கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை முழுமையான அளவில் 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

Related Articles

Related image1
ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Related image2
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!
35
CCTV Camera

CCTV Camera

 கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்

குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.

45
School Teacher

School Teacher

விழிப்புணர்வு பதாகைகள் முக்கியம்

பள்ளிகளில், அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது. விதிமுறைகளை செயல்முறைப்படுத்துவதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார். 
 

55
School Education Department

School Education Department

4 நாட்களுக்குள் இடைநீக்கம் 

இந்நிலையில், மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
ஆசிரியர்
பள்ளிக் கல்வித் துறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved