MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த அரசியல் பிழை.. வேதனையோடு பேசிய ராமதாஸ்..

அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த அரசியல் பிழை.. வேதனையோடு பேசிய ராமதாஸ்..

அரசியலில் நான் சில தவறுகளை செய்துவிட்டேன் என்று கூறி வேதனையை வெளிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் அதில் முதன்மையான ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என தெரிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Nov 06 2025, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்
Image Credit : Google

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் தற்போது கட்சி தொண்டர்கள் இடையேயான மோதலாக மாறி உள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் பாமக நிர்வாகி ஒருவரின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது அன்புமணியின் ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலி்ல் நான் சில தவறுகளை செய்துவிட்டேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. இரண்டாவது தவறு அவரை கட்சியின் தலைவராக்கியது. இதுபோன்ற சில தவறுகளை நான் செய்துவிட்டேன். தற்போது அமைதியான முறையில் பாமக.வை வழிநடத்தி வருகிறேன்.

24
அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்
Image Credit : Google

அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்

தற்போதைய சூழலில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என பொதுமக்களும், பிற கட்சியினரும் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு அன்புமணியின் பேச்சும், செயல்பாடுகளும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. நடக்கக்கூடிய அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

Related Articles

Related image1
விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா.. இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. அன்புமணி ஆத்திரம்
Related image2
கலவரத்தை உருவாக்கும் அன்புமணி..! குண்டர் சட்டத்தில் ஜெயிலில் போடுங்க..! ராமதாஸ் ஆவேசம்!
34
ஐயா என அழைத்தவர்கள் இன்று திட்டுகின்றனர்
Image Credit : Asianet News

ஐயா என அழைத்தவர்கள் இன்று திட்டுகின்றனர்

அன்புமணியின் செயல்பாடுகளால் ஐயா, ஐயா என்று அன்போடு அழைத்தவர்கள் இன்று என்னை திட்டி பேசுகின்றனர். அந்த கும்பலில் இருக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் நான் வளர்த்தப் பிள்ளைகள். நான் வளர்த்தப் பிள்ளைகளை அழைத்து அன்புமணியும், சௌமியாவும் சில பொறுப்புகளைக் கொடுத்துள்ளனர். அதனால் இன்று என் மீதும், ஜிகே மணி மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்.

44
இது தான் டீசன்ட், டெவலப்மென்ட் அரசியலா..?
Image Credit : Google

இது தான் டீசன்ட், டெவலப்மென்ட் அரசியலா..?

என் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறையோ, மோதலோ நடைபெற்றது கிடையாது. ஆனால் தற்போது கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துகின்றனர். இதையெல்லாம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இதுபோன்ற விசயங்களைத் தான் அவர் டீசன்ட் மற்றும் டெவலப்மென்ட் அரசியல் என சொல்லி வந்தாரா என தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved