- Home
- Tamil Nadu News
- எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் வகையில், தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

மின்சார வாரியம்
தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தரப்பில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
தருமபுரி
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
தருமபுரி
மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டயம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, செக்கம்பட்டி, கீரைப்பட்டி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
கன்னியாகுமரி
புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை.
நாகப்பட்டினம்
கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், பெரம்பூர், கடக்கம், எடமணல், திட்டை, அரசூர், மாத்திரவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பலூர்
தேனூர்
கதுர்ணமங்குணம், கோவில்பாளையம். புதுவேட்டைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
கீழபெரம்பலூர்
கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

