- Home
- Tamil Nadu News
- தொடர் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பவுர்ணமி செல்லும் பக்தர்களுக்கும் குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
தொடர் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பவுர்ணமி செல்லும் பக்தர்களுக்கும் குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
Weekend School Holiday Special Bus: மாசி பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Pournami Girivalam
பவுர்ணமி, அமாவாசை மற்றும் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu State Transport Corporation
பவுர்ணமி, அமாவாசை மற்றும் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Transport Department
மார்ச் 13ம் அன்று பவுர்ணமியை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
Government bus
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 270 பேருந்துகளும், மார்ச் 15 சனிக்கிழமை 275 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Weekend Special Buses
மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 14 வெள்ளிக்கிழமை மற்றும் மார்ச் 15 சனிக்கிழமை அன்று கூடுதலாக 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதாவரத்திலிருந்து மார்ச் 14, மற்றும் 15ம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
special buses
இந்நிலையில் வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,896 பயணிகளும் சனிக்கிழமை 2,381 பயணிகளும் மற்றும் ஞாயிறு இன்று 6,020 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.