- Home
- Tamil Nadu News
- டோட்டலாக மாறும் மெரினா.. இனி இஷ்டத்துக்கு கடை போட முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வியாபாரிகள் ஷாக்!
டோட்டலாக மாறும் மெரினா.. இனி இஷ்டத்துக்கு கடை போட முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வியாபாரிகள் ஷாக்!
மெரினாவில் புற்றீசல் போல் வித விதமான கடைகள் பல்கி பெருகி விட்டன. மக்கள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதைகள், மணற்பரப்புகள் என எங்கிலும் கடைகள் ஆக்கிரமித்து விட்டதால் சாலைகளில் செல்லும்போது கடல் அன்னையின் அழகை ரசிக்க முடியவில்லை.

உலகப்புகழ்பெற்ற மெரினா கடற்கரை
தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்றதாகும். சுமார் 13 கிமீ நீளம் கொண்ட கடற்கரை ஆசியாவின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமை கொண்டது. மெரினா கடற்கரையில் தான் தமிழகத்தை ஆட்சி புரிந்த பேரஞர் அண்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. இதனால் சென்னை மக்களின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக மாறி விட்ட மெரினாவுக்கு தினமும் ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
மெரினாவை ஆக்கிரமித்த கடைகள்
இத்தகைய சிறப்புமிக்க மெரினாவில் புற்றிசல் போல் வித விதமான கடைகள் பல்கி பெருகி விட்டன. மக்கள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதைகள், மணற்பரப்புகள் என எங்கிலும் கடைகள் ஆக்கிரமித்து விட்டன. எங்கும் கடைகள் நிறைந்து விட்டதால் சாலைகளில் செல்லும்போது கடல் அன்னையின் அழகை ரசிக்க முடியவில்லை.
மெரினா கடற்கரையைச் சர்வதேச தரத்திற்கு மாற்றும் நோக்கில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகளை முறைப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
மெரினா ஷாப்பிங் மால் அல்ல
சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், 'மெரினா கடற்கரை ஷாப்பிங் மாலோ, பஜாரோ அல்ல. அது மக்கள் பொழுதுபோக்கும் இளைப்பாறுவதற்கான இடம். இனி மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி'' என்று அதிரடியாக உத்தரவிட்டது.
மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் இனிமேல் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 'மெரினாவில் இப்போது 1,417 கடைகள் உள்ளன.
இந்த அனைத்து கடைகளையும் நீக்கி விட்டு குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 100 பொம்மை கடைகள், 100 பேன்சி கடைகள், 100 உணவகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்' என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

