MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரியல் எஸ்டேட் அதிபரை மடக்கிய சுவாதி.. இடையில் புகுந்த கிஷனின் தங்கச்சி மகன்! அதுவும் மகன் கண்முன்னே இப்படியா!

ரியல் எஸ்டேட் அதிபரை மடக்கிய சுவாதி.. இடையில் புகுந்த கிஷனின் தங்கச்சி மகன்! அதுவும் மகன் கண்முன்னே இப்படியா!

தெலங்கானாவில், ரியல் எஸ்டேட் அதிபருடன் கள்ளக்காதல் வைத்திருந்த சுவாதி என்ற பெண், தனது மகன் கண்முன்னே கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த தொழில் அதிபரின் உறவினர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 Min read
vinoth kumar
Published : Nov 10 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம். இதனால் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் தகராறு கொலையில் முடிந்து விடுகின்றன. அதுபோல தெலங்கானாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

25
Image Credit : Google

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்கு திருமணமாகி கணவரும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி பிரிந்து தனது மகன்களுடன் துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

Related Articles

Related image1
வைக்க கூடாத இடத்தில் கை வைத்து தொட்டும், தடவிய பைக் டாக்ஸி ஓட்டுநர்! அதிர்ச்சி அடைந்த பெண்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Related image2
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
35
Image Credit : Google

சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தொழில் அதிபர் கிஷனுக்கும் சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தனர்.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் எல்லை மீறிய சுவாதி கிஷனுக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் கிஷனின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் என்பவர் சுவாதியை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் சுவாதியும், அவரது இளைய மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.

55
Image Credit : our own

அப்போது திடீரென உள்ளே நுழைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மகன் கண்முன்னே சுவாதியை கழுத்தை அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜேஷ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
பெண்கள்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved