- Home
- Tamil Nadu News
- Budget Ooty Trip : 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்.. ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்.. விலை எவ்வளவு?
Budget Ooty Trip : 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்.. ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்.. விலை எவ்வளவு?
ஐஆர்சிடிசி தற்போது “அல்டிமேட் ஊட்டி” என்ற சிறப்பு சுற்றுலா பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்த ஆறு நாள் பயணத்தில், மூன்று இரவுகள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம். குறைந்த செலவில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட இந்த பேக்கேஜ் சிறந்த தேர்வாகும்.

ஐஆர்சிடிசி ஊட்டி டூர் பேக்கேஜ்
கோடை வெயிலில் இருந்து சில நாட்கள் தப்பித்து குளிர்ச்சியான மலைப்பகுதியில் நேரம் செலவிட வேண்டும் என்று பலரும் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஐஆர்சிடிசி தற்போது “அல்டிமேட் ஊட்டி” என்ற சிறப்பு டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. குறைந்த செலவில் ஆறு நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில், மூன்று இரவுகள் அழகிய ஊட்டி மலை நகரில் தங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இயற்கை ரசனையாளர்கள் மற்றும் குடும்பத்துடன் செல்ல விரும்புபவர்களுக்கு இந்த பேக்கேஜ் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

கோடை டூர் பேக்கேஜ்
இந்த டூர் ஹைதராபாத்திலிருந்து தொடங்குகிறது. செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து சபரி எக்ஸ் மூலம் பயணம் ஆரம்பமாகும். 3AC மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணிகள் தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம். கம்ஃபர்ட் 3AC பிரிவில் ஒருவருக்கு ரூ.33,590 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டபுள் மற்றும் டிரிப்பிள் ஷெரிங் வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், ஸ்டாண்டர்டு ஸ்லீப்பர் பிரிவில் குறைந்த கட்டணத்தில் இந்த டூர் கிடைக்கிறது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனி கட்டண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் ஊட்டி செல்ல வாய்ப்பு
சுற்றுலாவின் முதல் நாளில் செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு ரயில் புறப்படும். பிபிநகர், நல்கொண்டா மற்றும் குண்டூர் வழியாக இரவு முழுவதும் பயணம் நடைபெறும். இரண்டாம் நாள் காலை கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடைந்ததும், அங்கிருந்து காரில் ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஊட்டி ஏரி போன்ற முக்கிய இடங்கள் சுற்றிக்காட்டப்படும்.
ஊட்டி பயணம்
மூன்றாம் நாளில் தொட்டபெட்டா சிகரம், டீ மியூசியம் மற்றும் பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற புகழ்பெற்ற இடங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நான்காம் நாள் குன்னூர் பகுதிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பசுமை நிறைந்த மலைப்பாதைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலை பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. ஐந்தாம் நாள் மதியம் ஹோட்டலை காலி செய்து கோயம்புத்தூர் திரும்பி, அங்கிருந்து மீண்டும் சபரி எக்ஸ்பிரஸ் மூலம் செக்கந்தராபாத் நோக்கி பயணம் தொடங்கும்.
குறைந்த செலவு டூர்
இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி வரை கார் வசதி, மூன்று இரவுகள் தங்கும் ஹோட்டல் அறைகள் மற்றும் பயண காப்பீடு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் மதிய உணவு, இரவு உணவு, படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் சுற்றுலா இடங்களில் உள்ள நுழைவு கட்டணங்களை பயணிகள் தனியாக செலுத்த வேண்டும். கோடை விடுமுறையில் குடும்பத்துடன் அமைதியான மலை சுற்றுலாவை விரும்புபவர்களுக்கு, இந்த ஐஆர்சிடிசி ஊட்டி பேக்கேஜ் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

