MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்! இன்று விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்! இன்று விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

School College Holiday: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 8ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Oct 27 2025, 06:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
Image Credit : Google

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

உலகப் புகழ்பெற்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 6 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருச்செந்தூர் கடற்கரையில் முருகப் பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இதனை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

24
சூரசம்ஹாரம்
Image Credit : our own

சூரசம்ஹாரம்

இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கல்யாணம் வைபவம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூர சம்ஹார நிகழ்வை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
விஜயை மொத்தமா டேமேஜ் செய்ய திமுக இவ்ளோ கோடிகளை வாரி இறைந்ததா..? பெலிக்ஸ் ஜெரால்டு சொல்வது உண்மையா..?
Related image2
இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வந்தாச்சு புதிய விதி!
34
உள்ளூர் விடுமுறை
Image Credit : Getty

உள்ளூர் விடுமுறை

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

44
நவம்பர் 8ம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்
Image Credit : Google

நவம்பர் 8ம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்குப் ஈடு செய்யும் விதமாக நவம்பர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
கல்லூரி
விடுமுறை
தூத்துக்குடி
கோவில்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved