MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு! பதறிய தோழிகள்! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?

பள்ளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு! பதறிய தோழிகள்! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?

தென்காசியில் 9-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 06 2025, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
School Student

School Student

சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் கேரளாவில் சலூன் கடை  வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (35). இந்த தம்பதிக்கு 14 வயதில் மானஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சுரண்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

24
School Student

School Student

வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மானஷா வழக்கம் போல தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கியுள்ளார். இதனை கண்டு சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்கள் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வுப்பகுதி! விடாமல் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை? வானிலை மையம் சொல்வது என்ன?

34
<p>108 ambulance&nbsp;</p>

<p>108 ambulance&nbsp;</p>

மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழப்பு

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

44
chennai police

chennai police

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள்
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Recommended image3
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved