MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடிதூள்.! 1000 ரூபாய் மட்டுமல்ல 2ஆயிரம் உதவித்தொகை பெறலாம்.! உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அசத்தல் அறிவிப்பு

அடிதூள்.! 1000 ரூபாய் மட்டுமல்ல 2ஆயிரம் உதவித்தொகை பெறலாம்.! உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அசத்தல் அறிவிப்பு

மகளிர் உரிமை திட்டத்தில் 1000 ரூபாய் மட்டுமல்ல 2000 ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Aug 02 2025, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
Image Credit : our own

தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

தமிழக அரசு சார்பில் பல்வேறு மக்கள் நில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன, இதில் 46 வகையான அரசு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 

இந்த முகாம்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறுகின்றன. இந்த முகாமில் ரேஷன் கார்டு விண்ணப்பம், மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவப்பு வெளியிட்டுள்ளது.

24
2ஆயிரம் உதவித்தொகை திட்டம்
Image Credit : GOOGLE

2ஆயிரம் உதவித்தொகை திட்டம்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில். தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, 

இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2,000/ ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 7ம் தேதி விடுமுறை!
Related image2
ரூ.15ஆயிரம் பரிசோதனை... முற்றிலும் இலவசம்.! இன்று முதல் வீடு தேடி வரப்போகுது- மிஸ் பண்ணாதீங்க
34
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2ஆயிரம்
Image Credit : School education pro

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2ஆயிரம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.

இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:

1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).

2 கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)

3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்)

4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)

5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)

44
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
Image Credit : tndipr

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

கீழ்க்காணும் ஆவணங்களுடன், "அன்பு கரங்கள்* நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.

1. குடும்ப அட்டையின் நகல்

2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்

3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பபண் சான்றிதழ்)

குழந்தையின்வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved