MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக அரசின் நாடகத்திற்கு அளவே இல்லையா..? விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பேசுங்கள்.. அன்புமணி கொந்தளிப்பு

திமுக அரசின் நாடகத்திற்கு அளவே இல்லையா..? விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பேசுங்கள்.. அன்புமணி கொந்தளிப்பு

இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் விவசாயிகளுக்கு திமுக அரசு அரணாக நின்றதாகக் கூறிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Jan 14 2026, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வரலாற்றில் மிக மோசமான ஆட்சி
Image Credit : Asianet News

வரலாற்றில் மிக மோசமான ஆட்சி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்றால் அது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான். திமுக ஆட்சியில் வேளாண்மை வளரவில்லை. மாறாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2023&24ஆம் ஆண்டின் வேளாண்துறை மைனஸ் 3.22% (&3.22%), 2024&25ஆம் ஆண்டில் மைனஸ் 1.83% (&1.83%) வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது வேளாண்துறை உற்பத்தி மதிப்பு கடந்த இரு ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஒரு விவசாயியின் ஆண்டு வருமானம் ரூ.10, 804 ஆகவும், மாத வருமானம் வெறும் ரூ.900 ஆகவும் குறைந்திருக்கிறது. திமுக ஆட்சியில் உழவர்களுக்கு தினமும் ரூ.30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கும் நிலையில் அவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது என்று முதலமைச்சரே கூறினால் அதை விடக் கொடுமையான நகைச்சுவையும், கேலிக்கூத்தும் இருக்க முடியாது.

24
மோசமான நிலையில் தமிழக விவசாயிகள்
Image Credit : Asianet News

மோசமான நிலையில் தமிழக விவசாயிகள்

திமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வெறும் ரூ. 81 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு விவசாயிகள் எவ்வாறு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதே முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது எனும் போது அவரிடம் இதையெல்லாம் எதிர்பாக்க முடியாது.

Related Articles

Related image1
ஆட்சியின் கடைசி நிமிடம் வரை கொள்ளையடிப்பது தான் கொள்கையா.? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் அன்புமணி
Related image2
ராமதாஸின் அதிரடி மூவ்... பாமகவில் பரமபதம்.. மிரண்டு போன அன்புமணி.. 3 எம்.எல்.ஏ-க்களை நீக்கி அதிரடி..!
34
உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா?
Image Credit : Asianet News

உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா?

அவ்வளவு ஏன்? காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் அவற்றுக்கான இழப்பீடு இன்று வரை வழங்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களிலும், 2025&ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தான் ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்குவதற்கு அண்மையில் தான் தமிழக அரசு ஆனையிட்டது. அந்தத் தொகையும் உழவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா? எனத் தெரியவில்லை.

உழவர்கள் வாழ்வாதாரம் இல்லாதவர்கள். பயிர்களின் சாகுபடி சிறப்பாக அமைந்தால் தான் அவர்கள் வயிற்றுப் பசியையாவது தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அந்த பயிர்களே மழையில் மூழ்கி வீணாகி விட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டை வழங்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு உழவர்கள் என்ன சீமான்களா? உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா?

44
மனசாட்சியை தொட்டுப் பார்த்துவிட்டு பேசுங்கள்
Image Credit : Asianet News

மனசாட்சியை தொட்டுப் பார்த்துவிட்டு பேசுங்கள்

கற்பனையும் ஃபேண்டசியும் கலந்து எழுதிக் கொடுக்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்கான அத்தனையையும் முதலமைச்சர் சாதனையாக கூறுவது நியாயமல்ல. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் உழவர்கள் நிலை எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து விட்டு பேச வேண்டும். குறைந்தபட்சம் கடந்த ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் என்ற அளவில் உழவர்களுக்கு வழங்கிவிட்டு முதலமைச்சர் பேச வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
விவசாயம்
மு. க. ஸ்டாலின்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
Recommended image2
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!
Recommended image3
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
ஆட்சியின் கடைசி நிமிடம் வரை கொள்ளையடிப்பது தான் கொள்கையா.? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் அன்புமணி
Recommended image2
ராமதாஸின் அதிரடி மூவ்... பாமகவில் பரமபதம்.. மிரண்டு போன அன்புமணி.. 3 எம்.எல்.ஏ-க்களை நீக்கி அதிரடி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved