MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னைக்கு விரைவில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்

சென்னைக்கு விரைவில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்

சென்னை வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. டோரண்ட் கேஸ் நிறுவனம் 9 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

1 Min read
SG Balan
Published : Jun 30 2025, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்
Image Credit : Socialmedia

குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், எரிபொருள் இறக்குமதிச் செலவைக் குறைக்கும் நோக்கிலும், சென்னை வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

24
டோரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம்
Image Credit : social media

டோரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் (Torrent Gas) செயல்படுத்த உள்ளது.

Related Articles

Related image1
இல்லத்தரசிகயுக்கு குட் நியூஸ்! தீ பிடித்தாலும் வெடிக்காத சிலிண்டர்; Indian Oil அறிமுகப்படுத்திய Composite cyli
Related image2
இலவச சமையல் எரிவாயு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
34
குழாய் பதிக்க அனுமதி
Image Credit : our own

குழாய் பதிக்க அனுமதி

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) தற்போது அனுமதி வழங்கியுள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களைப் பதிக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

44
466 கிலோமீட்டர் குழாய்கள்
Image Credit : freepik

466 கிலோமீட்டர் குழாய்கள்

மொத்தம் 466 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 260 கிலோமீட்டர் தூரம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையப் பகுதிகளுக்குள் வருகிறது. இந்தக் கடலோரப் பகுதிகளில் குழாய்கள் பதிப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் சென்னை மக்களுக்குச் சுத்தமான மற்றும் செலவு குறைந்த எரிபொருளை வழங்குவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சென்னை
தமிழ்நாடு
வாயு உருளை
எரிவாயு உருளை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved