- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai:சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!
Power Shutdown in Chennai:சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்:
மாங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோவில் தெரு, நரிவன சாலை, அடிசன் நகர், பாண்டியன் நகர், பூந்தமல்லி குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சீனிவாச நகர், சுந்தர் நகர், சுமித்ரா நகர், கோவூர் சிக்கராயபுரம் பகுதி, மூங்காம்பிகை நகர், மாதா நகர், தங்கம் அவென்யு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மயிலாப்பூர்:
கோபாலபுரம் அம்மையப்பன் சந்து, தோமையப்பன் தெரு, கணபதி காலனி 1வது தெரு, பொன்னுசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
சூரி வடக்கு பேஸ், பாலாஜி நகர், பூந்தமல்லி சாலை, ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு, அண்ணாசாலை சாலை மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.
தண்டையாா்பேட்டை:
மேலூர் மீஞ்சூர் டவுன், சிறுவாக்கம், சீமாவரம், புதுப்பேடு, பட்டமந்திரி, அத்திப்பட்டு, பள்ளிப்புரம், கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.