- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் மட்டும் இன்று மின்தடை.!
Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் மட்டும் இன்று மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
12

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
22
தாம்பரம்:
புதுதாங்கல் கிருஷ்ணா நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், வெற்றி நகர், சர்ச் ரோடு, அன்னை இந்திரா நகர், ஏ.எஸ்.ராஜன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Videos