- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!
Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
12

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
22
தண்டையார்பேட்டை:
வீரராகவன் சாலை, என்.டி.சாலை, மீன்பிடித் துறைமுககத்தின் ஒரு பகுதி, செரியன் நகர் 1 முதல் 4 வது தெரு, மார்க்கெட் 1 முதல் 7 வது தெரு, அசோக் நகர் 1 முதல் 4 வது தெரு, புச்சம்மாள் தெரு, வாஷர் வரதப்பா தெரு, தேசியநகர் 1 முதல் 4 வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Videos