- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எத்தனை மணிநேரம் இருக்காது தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எத்தனை மணிநேரம் இருக்காது தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்:
செம்பரம்பாக்கம் மேப்பூர், பெங்களூரு ட்ரங்க் ரோடு, அகரம்மேல், நசரத்பேட்டை, திருமழிசை, மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.