- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்:
வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பல்லாவரம் இந்திராகாந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, ஓபராய் புதுதாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர், குட்வில் நகர், அமுதம் நகர், MEPS முழுவதும், சுப்ராயன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை:
டி.எச். சாலை, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.