MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இறந்த உடல் ஏன் ஒரு போதும் தனியாக வைக்கப்படுவதில்லை? இதெல்லாம் தான் காரணங்கள்!

இறந்த உடல் ஏன் ஒரு போதும் தனியாக வைக்கப்படுவதில்லை? இதெல்லாம் தான் காரணங்கள்!

இந்து மதத்தில் இறந்தவரின் உடல் தனியாகப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று கருடப்புராணத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Web Team
Published : Dec 09 2024, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Why is a dead body never kept alone

Why is a dead body never kept alone

மனிதனாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பதே மறுக்க முடியாத உண்மை.. இந்து புராணங்களின் படி ஒரு நபர் இறந்த பின்னர், அவரின் செயல்களுக்கு ஏற்ப ஒருவர் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கருடபுராணம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் தெளிவாக விளக்கம் அளிக்கும் நூல். , ஒரு நபர் இறந்த பிறகு என்ன துன்பங்கள் மற்றும் பலன்களைப் பெற வேண்டும் என்பது பற்றியும் அட்குக் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் இறந்த பின்னர், அவரது உடலை தகனம் செய்யும் வரை தனியாக வைக்கக்கூடாது.

25
Garuda puran facts

Garuda puran facts

இந்து தர்மத்தில் ஒருவரின் உடலை மாலையில் அல்லது இரவிலோ தகனம் செய்ய கூடாது. எனவே இரவில் ஒருவர் இறந்தால், அந்த நபரின் உடல் இரவோடு இரவாக வீட்டில் வைக்கப்படுகிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரது மகன்கள் அருகில் இல்லை என்றாலும், ​​அவர்கள் வரும் வரை உடலை வீட்டில் வைக்கின்றனர்.. ஆனால் எந்த சூழ்நிலையிலும் இறந்த உடல் தனியாக விடப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்? கருடபுராணம் அதற்கான காரணங்களை விரிவாக விளக்குகிறது.

35
Garuda puran facts

Garuda puran facts

இறந்த உடலை ஏன் தனியாக வைப்பதில்லை?

கருட புராணத்தின் படி, ஒருவர் இறந்தால், இறந்தவரின் உடலில் தீய சக்திகள் சுற்றித் திரிகிறது என்று நம்பப்படுகிறது. இறந்தவரின் உடலை தனியாக வைத்திருந்தால், இறந்தவரின் உடலில் தீய ஆவிகள் நுழையலாம் என்று நம்பப்படுகிறது. இறந்தவரின் உடலைத் தனியாக விட்டுச் செல்வது இறந்த நபருக்கு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, இறந்தவரின் சடலம் ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை.

45
Garuda puran facts

Garuda puran facts

இரண்டாவதாக, இறந்தவரின் உடலை தனியாக வைத்திருந்தால், சிவப்பு எறும்புகள் அல்லது விலங்குகள் போன்ற நரமாமிச உயிரினங்கள் இறந்த நபரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, இறந்தவரின் உடலை தகனம் செய்யும் வரை தனியாக வைப்பதில்லை.

55
Garuda puran facts

Garuda puran facts

இது தவிர, இறந்த உடலை தனியாக வைத்தால், துர்நாற்றம் வீசத் தொடங்கும் என்றும் நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இறந்தவரின் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் சுற்றிலும் பரவாமல் இருக்க, யாராவது அங்கேயே அமர்ந்து, தூபம் அல்லது அகர்பத்தி ஏற்றி வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

கருட புராணத்தின் படி, ஒரு நபர் இறந்தால், இறந்த நபரின் ஆன்மா தகனம் நடைபெறும் வரை குடும்பத்துடன் இணைந்திருக்கும். கருட புராணத்தின் படி, குடும்ப உறுப்பினர்கள் இறந்த உடலை விட்டுச் சென்றால், இறந்தவரின் ஆன்மா கைவிடப்பட்டதால் சோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, இறந்த உடலை ஒருபோதும் தனியாக விடக்கூடாது. இதன் காரணமாகவே இறந்த உடல் ஒரு போதும் தனியாக வைக்கப்படுவதில்லை. 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved