MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vaikunta Ekadasi: கோவிந்தா.! கோவிந்தா.! விண்ணை தொட்ட பக்தர்கள் முழக்கம்.! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.!

Vaikunta Ekadasi: கோவிந்தா.! கோவிந்தா.! விண்ணை தொட்ட பக்தர்கள் முழக்கம்.! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.!

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் கோலாகலமாகத் திறக்கப்பட்டது. நம்பெருமாள் எழுந்தருள, லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, ரங்கா" என முழக்கமிட்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 30 2025, 06:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்
Image Credit : our own

பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்

மார்கழி மாதத்தின் மிக உன்னதமான திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று இந்தியா முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் எனப்படும் 'பரமபத வாசல்' கோலாகலமாகத் திறக்கப்பட்டது. "பூலோக வைகுண்டம்" என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் முதல் திருமலை திருப்பதி வரை அனைத்து பெருமாள் கோவில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

25
பக்தர்களுக்கு நேரில் வந்து அருள்பாலித்த பெருமாள்
Image Credit : Asianet News

பக்தர்களுக்கு நேரில் வந்து அருள்பாலித்த பெருமாள்

ரத்தின அங்கியில் அருள்பாலித்த நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழாவின் நாயகனாகத் திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி மற்றும் பாண்டியன் கொண்டை அணிந்து, கிளி மாலையுடன் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வந்து சொர்க்கவாசல் வழியாகக் கடந்து சென்றார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ரங்கா.. ரங்கா.." என முழக்கமிட்டது விண்ணைப் பிளந்தது.

Related Articles

Related image1
Spiritual: கோடீஸ்வர யோகத்தை தரும் டாப் 5 ஆலயங்கள்.! ஒருமுறை போய் வந்தா நீங்களும் அம்பானி.!
Related image2
Spiritual: இனி உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வரவே வராது! கோபத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள்!
35
திருப்பதி: நள்ளிரவில் திறக்கப்பட்ட வைகுண்ட துவாரம்
Image Credit : our own

திருப்பதி: நள்ளிரவில் திறக்கப்பட்ட வைகுண்ட துவாரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் வைகுண்ட துவாரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சொர்க்கவாசல் முழுவதும் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் விஜிலென்ஸ் ஊழியர்கள் பக்தர்களை வரிசைப்படுத்தி விரைவான தரிசனத்திற்கு வழிவகை செய்தனர். 

45
திருவல்லிக்கேணி: பார்த்தசாரதி கோவிலில் உற்சாகம்
Image Credit : our own

திருவல்லிக்கேணி: பார்த்தசாரதி கோவிலில் உற்சாகம்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளியபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா.. கோவிந்தா.." எனப் முழக்கமிட்டு வழிபட்டனர். இதேபோல் சென்னையில் உள்ள நன்மங்கலம், மயிலாப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

55
இந்தியா முழுவதும் பக்தி வெள்ளம்
Image Credit : our own

இந்தியா முழுவதும் பக்தி வெள்ளம்

தமிழகம் மற்றும் ஆந்திரா மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை சிறப்புப் பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.பக்தர்களுக்குத் தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கோவில் நிர்வாகங்கள் செய்திருந்தன. திருப்பதியில் இன்று முதல் ஜனவரி 1 வரை ஆன்லைன் டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில், ஜனவரி 2 முதல் 8-ம் தேதி வரை 'தர்ம தரிசனம்' மூலம் பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானத்தை எட்டிய பக்தர்களின் முழக்கங்களுடன், நாடு முழுவதும் உள்ள வைணவத் தலங்கள் இன்று வைகுண்டமாகவே காட்சியளிக்கின்றன.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கோவில்
கோவில் நிகழ்வுகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: கோடீஸ்வர யோகத்தை தரும் டாப் 5 ஆலயங்கள்.! ஒருமுறை போய் வந்தா நீங்களும் அம்பானி.!
Recommended image2
Spiritual: இனி உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வரவே வராது! கோபத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள்!
Recommended image3
Lizard Falling: ராஜ யோகம் தரும் பல்லி! எந்த இடத்தில் விழுந்தால் செல்வம் கொழிக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Spiritual: கோடீஸ்வர யோகத்தை தரும் டாப் 5 ஆலயங்கள்.! ஒருமுறை போய் வந்தா நீங்களும் அம்பானி.!
Recommended image2
Spiritual: இனி உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வரவே வராது! கோபத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved