MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி..? என்ன காரணம் தெரியுமா..?

இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி..? என்ன காரணம் தெரியுமா..?

Tirumala Tirupati: இன்று அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே, திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ளது.

2 Min read
Anija Kannan
Published : Oct 25 2022, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி அதாவது இன்று ஏற்படுவதால், திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடையானது காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

26

அதேபோல், திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் இன்று அன்ன பிரசாதம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசிக்கும் நேரத்தை திட்டம் செய்ய தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க...Solar Eclipse 2022: இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்..யாருக்கு மிகவும் மோசமானது..? முழு விவரம் உள்ளே..!

36

மேலும், நவம்பர் 8-ம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தையொட்டி கோயில் நடை காலை முதல் மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் மூடப்படும். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், சுவாமியை ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் மூலம் (SED) தரிசனம் ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 
 

46

பொதுவாக சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. பொதுவாக சூரிய கிரகணத்தின் போது பூமியில் ஏற்படுகின்ற நிழல் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டதாக கருதப்படுகின்றது.

56

 

 சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும்.  இந்திய நேரப்படி, அக்டோபர் 25 ஆம் தேதி அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை  சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இது பகுதி சூரிய கிரகணமாகப் பார்க்கப்படும்.

 

 

66

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க...Solar Eclipse 2022: இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்..யாருக்கு மிகவும் மோசமானது..? முழு விவரம் உள்ளே..!

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved