MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தீராத குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டுமா? காஞ்சி காமாட்சி அம்மன் அருளும் எளிய பரிகாரங்கள்!

தீராத குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டுமா? காஞ்சி காமாட்சி அம்மன் அருளும் எளிய பரிகாரங்கள்!

Mangadu Kamakshi Amman Temple Pariharam to Solve Family Issues : குடும்ப கஷ்டங்கள், பணத்தடை மற்றும் மனக்கவலைகள் நீங்கி, இல்லத்தில் சுபிட்சம் பெருக காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாடு ஒரு மிகச்சிறந்த தீர்வாகும்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 30 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குடும்ப கஷ்டம் தீர பரிகாரம்
Image Credit : Kamakshi Amman Temple Mangadu Instagram

குடும்ப கஷ்டம் தீர பரிகாரம்

சென்னை மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது பார்வதி தேவி சிவனை மணம் முடிக்க நெருப்பில் தவம் செய்த ஆதி காமாட்சி தலமாகும். காஞ்சி காமாட்சிக்கு முந்தியதாக மாங்காட்டில் தான் காமாட்சி அம்மன் அருள்பாளித்தார்.

25
கோவிலின் அமைப்பு:
Image Credit : Kamakshi Amman Temple Mangadu Instagram

கோவிலின் அமைப்பு:

7 நிலை ராஜகோபுரம், உள்ளது. மூலவர் காமாட்சி அம்மன், வலது காலை மடித்து, இடது காலை மடக்கி, பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்திருப்பார் இது இந்த கோயிலுக்கு தனிச்சிறப்பாக அமைகிறது.மாமரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். ஆதி காமாட்சி சன்னதியும் உள்ளது.

35
பலன்கள்:
Image Credit : Kamakshi Amman Temple Mangadu Instagram

பலன்கள்:

காமாட்சி அம்மன் இங்கு தவம் செய்ததால், இங்கு வந்து 6 வாரங்கள் தொடர்ந்து எலுமிச்சை பழத்தில் மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாத்தினால் நம்மில் இருக்கும் கஷ்டங்கள் மனவேதனைகள் குடும்ப கவலைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. எலுமிச்சம்பழ தோலினால் விளக்கேற்றினால் குடும்ப கஷ்டம் தீரும் தொழிலில் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.

45
கோவிலின் வரலாறு:
Image Credit : Kamakshi Amman Temple Mangadu Instagram

கோவிலின் வரலாறு:

இந்த உலகம் செயல்படுவது அந்த ஈசனின் பார்வையினால் தான். அப்படி இருக்கும்போது அந்த எம்பெருமானின் கண்களை ஒருமுறை விளையாட்டாக பார்வதிதேவி மூடி விட்டாள். எம்பெருமானின் இருகண்களும் மூடப்பட்ட ஒரு நொடி என்பது, நமக்கு ஒரு யுகம் ஆகும். பூலோகம் இருண்டது. சூரியன் சந்திரன் ஒளிரவில்லை. தேவியின் விளையாட்டு வினையாகி விட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் சிவபெருமான். இதனால் தேவியை, பூலோகத்தில் மனித பிறவி எடுத்து, தவம் புரிந்து பின்பு தன்னை வந்து சேரவேண்டும் என்ற சாபத்தை கொடுத்துவிட்டார் சிவபெருமான். பூலோகத்தில் மனித பிறவி எடுத்த தேவி, மாமரங்கள் நிறைந்த இந்த மாங்காட்டினை தேர்ந்தெடுத்து, நெருப்பின் மத்தியில் கடும் தவம் புரிந்து, காஞ்சிபுரத்தில் காமாட்சியாக அந்த ஏகாம்பரேஸ்வரரை மணந்தார். 

55
Mangadu Kamakshi temple significance
Image Credit : Kamakshi Amman Temple Mangadu Instagram

Mangadu Kamakshi temple significance

மாஞ்சோலைகள் நிறைந்த இந்த இடம் மாங்காடு என்றும், அம்மன் தவம் இருந்ததால் மாங்காடு காமாட்சி அம்மன் என்றும் இக்கோவிலுக்கு பெயர் வந்தது.ஆனால் தேவி ஈசனை மணந்த பிறகும் இந்த இடத்தில் இருந்த வெப்பமானது சிறிதும் தணியவில்லை. வறட்சியோடு தான் காணப்பட்டது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இந்தப் பகுதியை செழிப்பு மிக்க பகுதியாக மாற்றினார். ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்த பின்புதான் அந்த அம்மனின் கோபம் தணிந்தது. இதனால்தான் இந்த இடத்தில் ஸ்ரீ சக்கரத்தை மூலஸ்தானத்தில் அம்பாளின் ரூபமாக வழிபட்டு வருகிறார்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈசன் இன்றி அமையாத உலகு! சிவனை அடைய காமாட்சி அம்மன் பட்ட கஷ்டங்கள் தெரியுமா?
Recommended image2
பதவி உயர்வு தரும் பாதாள முருகன் - வழிபாட்டு முறைகளும் பலன்களும்: வாழ்வை மாற்றும் தெய்வீக சக்தி!
Recommended image3
வெற்றிகளை வாரி வழங்கும் பாதாள செம்பு முருகன்: ஓர் ஆன்மீக ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved