MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: கடன், தடை, தோல்வி... எல்லாவற்றையும் ஓட ஓட விரட்டும் எள் தீபம்! எப்படி ஏற்றவேண்டும் தெரியுமா?

Spiritual: கடன், தடை, தோல்வி... எல்லாவற்றையும் ஓட ஓட விரட்டும் எள் தீபம்! எப்படி ஏற்றவேண்டும் தெரியுமா?

சனி பகவானை முறையாக வழிபட்டால் கடன், தோல்வி போன்ற இன்னல்கள் நீங்கும். அவருக்கு எள் தீபம் ஏற்றுவதன் புராண் பின்னணி, சரியான முறை மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் அவரின் அருளை பெற்று வாழ்வில் வெற்றி காண்பது எப்படி என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 03 2026, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இன்னல்கள் யாவும் பனிபோல் நீங்கும்
Image Credit : Asianet News

இன்னல்கள் யாவும் பனிபோல் நீங்கும்

வாழ்க்கையில் அடுத்தடுத்த தடைகள், தீராத கடன் சுமை, தொட்ட காரியங்களில் தோல்வி என மனமுடைந்து போயிருப்பவர்களுக்குப் பிடிமானமாக இருப்பவர் சனி பகவான். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற பெருமைக்குரிய சனி பகவானை முறையாக வழிபட்டால், இன்னல்கள் யாவும் பனிபோல் நீங்கும். அதற்கு மிகச்சிறந்த வழி எள் தீபம் ஏற்றுவதாகும்.

27
சனீஸ்வரரின் பிறப்பும் போராட்டமும்
Image Credit : Asianet News

சனீஸ்வரரின் பிறப்பும் போராட்டமும்

சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சனி பகவான். தன் தாய்க்கு நேர்ந்த அவமதிப்பைத் துடைக்கவும், தந்தைக்கு இணையான அந்தஸ்தைப் பெறவும் பரமேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தார் சனி.அவர் தவம் செய்த காட்டில், சூரியன் தனது வெப்பத்தை உக்கிரமாகப் பொழிந்தார். அந்த வெப்பத்தால் காட்டில் இருந்த எள் செடிகள் அனைத்தும் எரிந்து அக்னி பிழம்பாக மாறியது. ஆனால், அந்த அக்னி ஜுவாலையின் சக்தியையும் தன்னுள் அடக்கி, தவம் கலையாமல் சிவனருள் பெற்றார் சனி பகவான். இந்த புராண நிகழ்வின் பின்னணியிலேயே அவருக்கு எள் தீபம் ஏற்றும் வழக்கம் உருவானது.

Related Articles

Related image1
Spirtual: உங்கள் நெற்றி சொல்லும் ரகசியம்.! அதிர்ஷ்டத்தின் அறிகுறி உங்களுக்கு இருக்கா?
Related image2
Spiritual: கடனை விரட்டி அடிக்கும் மந்திரம் எது தெரியுமா? எப்போது எத்தனை முறை சொல்ல வேண்டும்?
37
எள் தீபம் ஏற்றுவது எப்படி?
Image Credit : Asianet News

எள் தீபம் ஏற்றுவது எப்படி?

பலரும் எள்ளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எண்ணெய்க்குள் போட்டு எரிப்பார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாகச் சொல்லப்படும் சரியான முறை இதுதான்.

நல்லெண்ணெய் தீபம்

எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது. அக்னியின் சக்தியைத் தன்னுள் கொண்ட சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவதே மிகுந்த மனமகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.

எள்ளை எரிக்கலாமா?

எள்ளை நேரடியாக நெருப்பில் இட்டு எரிப்பதைத் தவிர்த்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதே சிறந்தது என்று பெரியோர்கள் வழிகாட்டுகிறார்கள்.

எள் சாதம்

சனி பகவானுக்கு எள்ளை அர்ப்பணிக்க விரும்பினால், எள் சாதம் தயாரித்து அவருக்குப் படைக்கலாம். அதேபோல் சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைப்பதும் விசேஷமானது.

47
எந்த நாளில் ஏற்றலாம்?
Image Credit : unsplash

எந்த நாளில் ஏற்றலாம்?

பொதுவாக சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்றாலும், அவரை வழிபடக் குறிப்பிட்ட நாள் என்று எதுவுமில்லை.

தினமும் வழிபடலாம்

அந்தணர்கள் தினமும் மூன்று வேளைகளும் கைகளில் நீர் ஏந்தி சனி பகவானை வழிபடும் வழக்கம் உண்டு.

தடைகள் நீங்க

உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தாலோ அல்லது தீராத கடன் மற்றும் காரியத் தடைகள் இருந்தாலோ, வாரத்தின் அனைத்து நாட்களிலும் எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

விசேஷ நாட்கள்

வெள்ளிக்கிழமைகளில் நவகிரகங்களை வலம் வரும்போதும், பிறந்தநாள் ஹோமங்களின் போதும் சனி பகவானை வழிபடுவது தடைகளைத் தகர்க்கும்.

57
நீதியை வழங்குவதில் சனி பகவான் நேர்மையானவர்
Image Credit : stockPhoto

நீதியை வழங்குவதில் சனி பகவான் நேர்மையானவர்

நிழல் கிரகத்தின் மைந்தனாக இருந்தாலும், நீதியை வழங்குவதில் சனி பகவான் நேர்மையானவர். முறையாக எள் தீபமிட்டு அவரைச் சரணடைந்தால், நம்மை வாட்டும் கடன் பிரச்சனைகள் ஓடும், காரியத் தடைகள் விலகும், வாழ்வில் வெற்றியும் அமைதியும் நிலைக்கும்.

67
சனி காயத்ரி மந்திரம்
Image Credit : unsplash

சனி காயத்ரி மந்திரம்

தினமும் காலையில் குளித்துவிட்டு இந்த மந்திரத்தை 9 அல்லது 108 முறை சொல்வது மிகவும் விசேஷமானது.

"ஓம் சனைச்சராய வித்மஹே சூரிய புத்ராய தீமஹி தன்னோ மந்தப் ப்ரசோதயாத்"

சனி பகவான் துதி 

இதை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துச் சொல்லலாம்.

"சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா!"

மூல மந்திரம் 

மிகவும் எளிமையான, அதே சமயம் சக்தி வாய்ந்த மந்திரம்:

"ஓம் ஷம் சனைச்சராய நமஹ" 

77
காக வாகனத் துதி
Image Credit : Getty

காக வாகனத் துதி

சனி பகவானின் வாகனமான காகத்தை நினைத்துச் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

"நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்"

பொருள்

நீல நிற மலை போன்ற பிரகாசம் கொண்டவரே, சூரியனின் மைந்தனே, எமதர்மனின் சகோதரரே, சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவரே, மந்தகதி கொண்ட சனீஸ்வரரே, உங்களைப் பணிந்து வணங்குகிறேன்.

வழிபாட்டு முறைகள்

நேரம்: சனிக்கிழமை காலை 6.00 - 7.00 மணிக்குள் அல்லது மாலை 8.00 - 9.00 மணிக்குள் (சனி ஹோரையில்) சொல்வது அதிக பலன் தரும்.

பிரசாதம்

கருப்பு எள் கலந்த சாதம் அல்லது எள் உருண்டை படைக்கலாம்.

தர்மம்

மாற்றுத்திறனாளிகளுக்கோ அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கோ உங்களால் முடிந்த உதவியைச் செய்வது சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஸ்லோகங்களைச் சொல்லும்போது முழு நம்பிக்கையுடன் சொன்னால், ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருப்பதி லட்டு விற்பனையில் சாதனை! டேஸ்டை கூட்டியதால் ஒரே ஆண்டில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை!
Recommended image2
Spiritual: கடனை விரட்டி அடிக்கும் மந்திரம் எது தெரியுமா? எப்போது எத்தனை முறை சொல்ல வேண்டும்?
Recommended image3
கருவறையிலும் கைவரிசை! சபரிமலை தங்கக்கொள்ளையில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. சென்னையில் முக்கியக் குற்றவாளிகள்!
Related Stories
Recommended image1
Spirtual: உங்கள் நெற்றி சொல்லும் ரகசியம்.! அதிர்ஷ்டத்தின் அறிகுறி உங்களுக்கு இருக்கா?
Recommended image2
Spiritual: கடனை விரட்டி அடிக்கும் மந்திரம் எது தெரியுமா? எப்போது எத்தனை முறை சொல்ல வேண்டும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved