MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தீபாவளி திருநாளில் ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்; அதன் சிறப்புக்கள் என்ன?

தீபாவளி திருநாளில் ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்; அதன் சிறப்புக்கள் என்ன?

தீபாவளித் திருநாளில் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும் ?எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? இதனால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். 

3 Min read
Author : Dhanalakshmi G
| Updated : Oct 21 2022, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொதுவாக தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான 22ஆம் தேதி, தன திரயோதசி என அழைக்கப்படுகிறது. அன்று குபேரனுக்கும், லட்சுமிக்கும் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். (பஞ்சாங்கத்தின்படி 22ஆம் தேதி மாலை 06.02 மணிக்கு தன திரயோதசி துவங்கி 23ஆம் தேதி மாலை 6.03 வரை இருக்கிறது. இந்த நேரத்தில் புதிய பொருட்களை வாங்கலாம்) இதற்குப் பின்னர், இரண்டாம் நாளான 23ஆம் தேதி மாலைக்கு மேல் சிறிய தீபாவளி வருகிறது. இந்த நாளில்தான் நரகாசுரனை கிருஷண பகவான் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். ராவணனை கொன்ற பின்னர் இந்த நாளில்தான் அயோத்திக்கு ராமர் வந்ததாக கூறப்படுகிறது. 25ஆம் தேதி கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. 26ஆம் தேதி, இந்த நாளில் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

26

இந்த தீபாவளி திருநாளில் தங்கள் வீடுகளில் மண் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். இதன் மூலம், எதிர்மறை ஆற்றல் நம் வாழ்விலிருந்து நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்து புராணங்களின்படி, தீபாவளி மற்றும் தன திரயோதசி (தந்தேராஸ்) காலங்களில் ஒருவர் தங்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு  வேண்டி  பிரார்த்தனை செய்து 13 விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. 

தந்தேராஸ் என்றும் அழைக்கப்படும் தன திரயோதசி, தீபாவளி பண்டிகைகளின் ஐந்து நாட்கள் கொண்டாட்டத்தின் முதல் நாளாகும். தீபாவளியன்று மொத்தம் 13 மண் விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். கெட்ட தீய வினைகள் மற்றும் மரணத்தைத் தடுக்க முதலில் உங்கள் வீட்டிற்கு வெளியே குப்பை அகற்றும் இடத்தில் விளக்கை வைக்க வேண்டும்.

36

இரண்டாவது மண் விளக்கை நெய் ஊற்றி வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இது உங்களைச் சுற்றி நேர்மறையான அதிர்வுகளைப் பரப்ப உதவும்.

நம் வாழ்வில் செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக ஆசீர்வாதத்தைப் பெற உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் சிலை அல்லது புகைப்படத்தின் முன் மூன்றாவது தியாவை ஏற்றி வைக்க வேண்டும்.

புனித துளசி செடியின் முன் நான்காவது மண் விளக்கை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

ஐந்தாவது தீபத்தை உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டிலிருந்து தீய சக்திகளை விரட்ட உதவுகிறது.

செல்வம் பெருக காரணமாய் இருக்கும் காயத்திரி மந்திரம் .. தினமும் சொல்லுங்க!

46

கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி ஆறாவது விளக்கை ஏற்ற வேண்டும், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால், ஒரு அரச மரத்தின் கீழ் ஏற்ற வேண்டும். இது நிதி நெருக்கடியிலிருந்து விடுபடவும், எதிர்மறையான அதிர்வுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

ஏழாவது விளக்கை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எந்தக் கோவிலிலும் அல்லது நீங்கள் விரும்பும் எந்தக் கோவிலிலும் ஏற்றலாம்.

மகாலஷ்மியின் அருள் பூரணமாக கிடைக்க தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை வ்ழிபாட்டு முறைகள்!

அடுத்து, எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளைத் தடுக்க, வீட்டின் குப்பைக்கு அருகில் எட்டாவது விளக்கை ஏற்ற வேண்டும்.

ஒன்பதாவது விளக்கை வீட்டின் கழிவறைக்கு வெளியே வைக்க வேண்டும், இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை பராமரிக்கவும், உங்கள் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரவும் உதவுகிறது.

56

உங்கள் வீட்டின் கூரையில் பத்தாவது விளக்கை வைக்க வேண்டும். இந்த விளக்கு எதிர்மறை ஆற்றலுக்கு எதிரான பாதுகாப்பைக் குறிக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள எந்த ஜன்னலிலும் பதினொன்றாவது விளக்கை வைக்கலாம், இது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கவும் உதவுகிறது.
 

66

பன்னிரண்டாவது விளக்கை பொதுவாக உங்கள் வீட்டின் மேல் தளத்தில் வைக்க வேண்டும். இது உங்களது நல்வாழ்வுக்கு உதவுகிறது.

பதிமூன்றாவது விளக்கை உங்கள் வீட்டின் குறுக்குவெட்டுகளில் ஏதேனும் ஒன்றில் வைக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல அதிர்வுகளைக் கொண்டுவர உதவும்.

கோடி நன்மை தரும் குரு பார்வை விழ என்ன செய்வது?

About the Author

DG
Dhanalakshmi G
செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீன ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! மார்ச் 15-க்குப் பின் இந்த 4 ராசிகள் வாழ்க்கை அடியோடு மாறும்.!
Recommended image2
Sani Peyarchi 2026: இன்று தொடங்கும் ஏழரை சனி.! பரிகார ராசிகள் எவை? சனியின் பிடியில் இருந்து தப்பிக்க உதவும் பரிகாரங்கள்.!
Recommended image3
தோல்வி நெருங்கும் நேரத்தில் செய்யக்கூடாத ஒரு தவறு… சாணக்கியர் எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved