MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..

வாஸ்து தோஷம் தானாக விலகி ஓட இங்கே கொடுக்கப்பட்டுள்ள காரியத்தை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். 

2 Min read
maria pani
Published : Mar 08 2023, 11:04 AM IST| Updated : Mar 08 2023, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாம் கஷ்டப்பட்டு கட்டும் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும் என்றால் அந்த வீட்டில் நிம்மதி தங்காது. ஓயாமல் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இப்படி வாஸ்து தோஷத்தால் மன நிம்மதி குலைந்து வெறும் உடலாக மட்டும் வாழ்பவர்கள் பலர். பல ஆயிரங்களை செலவு செய்து வாஸ்து நிபுணர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பல மாற்றங்களை செய்கின்றனர் சிலர். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புவர். இங்கு எளிய காரியங்களால் எப்படி வாஸ்து தோஷத்தை நீக்குவது என்பதை காணலாம். 

26

கிரகலட்சுமி தான் வாஸ்து தோஷத்தை நீக்கி நமக்கு நிம்மதியான வாழ்க்கையை அருளுகிறார். இந்த கிரகலட்சுமி ஆசீர்வாதம் நம் மீது இருந்தாலே எந்த வாஸ்து தோஷமும் பலிக்காது. அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த கிரகலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுவது நம்முடைய வீட்டில் நிலை வாசல் தான். 

36

நம்முடைய முன்னோர் வீட்டு நிலை வாசலில் மேலே நிற்கக்கூடாது, நிலை வாசலின் மீது அமரக்கூடாது, நிலை வாசலை மிதிக்கக்கூடாது என பல அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலை வாசலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கிரகலட்சுமியின் அருளையும் ஆசியையும் பூரணமாக நமக்கு கிடைக்கச் செய்யும். 

46

இந்துக்களில் இன்னும் சிலர் தங்களுடைய வீட்டை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்வர். அதிலும் வெள்ளி அன்று நிலை வாசலை கழுவி மஞ்சள், குங்குமம் பூசி பூ வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த எளிய வழிபாட்டு முறை தான் கிரகலட்சுமியின் மனம் குளிர செய்ய நாம் செய்ய வேண்டியது. ஆனால் இப்போது அழகுக்காக மஞ்சள் பெயிண்டை நிலைவாசலில் அடித்து விட்டு மக்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இதனால் தான் லட்சுமியின் அருளை தவற விடுகிறோம்.

56

நிலைவாசலில் மஞ்சள், குங்குமத்தை ஒவ்வொரு வாரமும் பூசி, கூடவே கொஞ்சம் பூ வைத்து வழிபட்டால் கிரகலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும். அத்துடன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் எல்லாம் நீங்கிவிடும். 

இதையும் படிங்க: அனுபவித்த மொத்த துன்பமும் விலக.. இந்த ஒரு காரியத்தை பண்ணுங்கள்.. அனுமன் அருளால் அதிர்ஷ்டம் தேடி வரும்..

66

 

கிரகலட்சுமியின் உருவப்படத்தையும் நம் வீட்டு நிலை வாசலின் மேலே வைக்கலாம். வாராவாரம் வெள்ளி அன்று அந்தப் படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம் இட்டு பூ வைத்து வழிபட்டால் லட்சுமியின் அனுகிரகம் கிடைக்கும். வீட்டில் ஒரு நல்லதும் நடக்காமல் பீடை பிடித்து விட்டதாக நினைத்தால் வாஸ்து தோஷம் காரணமாக இருக்கலாம். இந்த எளிய வழிபாட்டை செய்தால் நிம்மதி வீட்டில் இல்லை என சொல்லவே முடியாது. மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கும். 

இதையும் படிங்க: உங்க வீட்டில் இருந்தால் இந்த செடிகள் இருந்தால்.. பணம் தன்னால வரும்.. அதிர்ஷ்ட மழை பொழியும்..

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved