MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • 1120 படி ஏறி தான் தரிசிக்க முடியும்; கொல்லிமலையின் காவலன்: தீராத வினைகளையும் தீர்ப்பவன்; மாசி பெரியசாமி கோயில்!

1120 படி ஏறி தான் தரிசிக்க முடியும்; கொல்லிமலையின் காவலன்: தீராத வினைகளையும் தீர்ப்பவன்; மாசி பெரியசாமி கோயில்!

KolliMalai Masi Periyasamy Temple History Tamil : கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில் ஒரு சக்திவாய்ந்த காவல் தெய்வத் தலம். இக்கோயிலின் சிறப்பு, பக்தர்கள் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 07 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்
Image Credit : Velu P Facebook

கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மலை கொல்லிமலை தான். கொல்லிமலை ஏறுவதற்கு 72 வளைவு மலை ஏற வேண்டும். மலையை ஏறுவதற்குள் உடம்பு கிடுகிடுத்து விடும். அங்கு சிறப்பு மிக்க அதிசயமான ஒரு கோயில் உள்ளது அந்த கோயில்தான் மாசி பெரியண்ணா சுவாமி கோயில். கோயிலுக்கு மற்றொரு பேரும் உண்டு. கற்ப சாமி கோயில் என்றும் மக்களால் கூறப்படுகிறது. மாசிக் குன்றில் அமைந்துள்ள ஒரு சக்திவாய்ந்த தெய்வக் கோவிலாகும்

25
கொல்லிமலை கருப்பனின் வரலாறு:
Image Credit : Velu P Facebook

கொல்லிமலை கருப்பனின் வரலாறு:

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார். அப்போது இருந்தே இந்த கோயில் உருவானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாகவும் மக்கள் பெரியண்ணசாமி என்று அழைக்கப்படும் கருப்பனை வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

35
கருப்பனின் பெண் காவல்தெய்வம்:
Image Credit : Velu P Facebook

கருப்பனின் பெண் காவல்தெய்வம்:

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் பகுதியில் உள்ளது. மிகவும் சிறப்பு வைக்க இந்த கோயில் துடியான தெய்வம் என்று கூறப்படுகிறது. ஒரு பெண் நினைத்தால் இதையும் சாதிக்கலாம் என்பதற்கு எட்டுக்கை அம்மன் ஒரு உதாரணமாக அந்தப் பகுதியில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு வீரமிக்க ஒரு பெண் காவல் தெய்வம் என்றால் அது இவர்தான் என்றும் கூறுகின்றனர்.

45
கருப்பனிடம் வேண்டுதல்:
Image Credit : Velu P Facebook

கருப்பனிடம் வேண்டுதல்:

பில்லி சூனியம் ஏவல் பிசாசு அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர். தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றன உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர் ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர் படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு உள்ளது.கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள் என்றால் வீடு கட்டுவதற்கு இந்த பரிகாரம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் அதிகமாக இருப்பது மணிகள் மட்டுமே. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில்கட்டுதல், வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

55
கருப்பு அமைப்பு:
Image Credit : Velu P Facebook

கருப்பு அமைப்பு:

பெரியண்ணசாமி கோயிலுக்கு செல்வதற்கு மிகுந்த மலைப்பகுதியை கொண்ட அமைப்பாக இருக்கும். 1120 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும் இந்த படிகட்டுகளை ஏறி செல்வதற்கே இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று கூறப்படுகிறது மறுபடியும் சாமி கும்பிட்டு இறங்குவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் 1120 படிக்கட்டுகளை சேரி சென்று கருப்பன் என்று கூறப்படும் பெரியண்ணசாமி ஒரு சிறிய ஓலை குடிசைக்குள் இரண்டடி உயரமுள்ள சிலையாகவே இருக்கிறார். ஆனால் மிக சக்தி வாய்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. ஒருவரை பழி வாங்குவதற்கோ அல்லது நம்மில் எழுந்த பலிக்காகவோ ஒரு கோழியை உயிருடன் வேலில் குத்துவதே இந்த கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னைக்கு அருகில் இப்படியொரு கோயிலா? பக்தர்களை வியக்க வைக்கும் முருகப் பெருமான் - ஒருமுறை போனால் விதியையே மாற்றும் தலம்!
Recommended image2
Spiritual: பிடித்த வேலை உடனே கிடைக்கனுமா.?! நீங்க செய்ய வேண்டிய வழிபாடு இதுதான்.!
Recommended image3
Spiritual: உங்கள் காதலை நிறைவேற்றும் 3 பரிகாரங்கள்.! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved