MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Karthigai Deepam: தீபம் ஏற்ற சரியான நாள் எது?! பரணி தீபம் எப்போது ஏற்ற வேண்டும் தெரியுமா?!

Karthigai Deepam: தீபம் ஏற்ற சரியான நாள் எது?! பரணி தீபம் எப்போது ஏற்ற வேண்டும் தெரியுமா?!

2025-ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் குறித்த குழப்பங்களுக்கு தெளிவான விளக்கத்தை பார்ப்போம். பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வ ஆலய தீபத்தை  எந்தெந்த நாட்களில் ஏற்ற வேண்டும் என்பதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 02 2025, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கார்த்திகை தீபம் குறித்த தெளிவான விளக்கம்
Image Credit : Asianet News

கார்த்திகை தீபம் குறித்த தெளிவான விளக்கம்

கார்த்திகை தீபத் திருநாள் குறித்த குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக, பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

23
பரணி தீபமும் திருவண்ணாமலைத் தீபமும்
Image Credit : our own

பரணி தீபமும் திருவண்ணாமலைத் தீபமும்

பரணி தீபம்: பரணி தீபம் என்பது, காலவேளையில் பரணி நட்சத்திரம் இருக்கும் நாளைப் பின்பற்றி ஏற்றப்படுவதாகும். டிசம்பர் 2 ஆம் தேதி சாயங்காலத்திற்குப் பிறகுதான் பரணி நட்சத்திரம் வருகிறது என்பதால் பரணி தீபம் என்பது (டிசம்பர் 3, 2025) காலையில் ஏற்றப்பட வேண்டும்.

திருவண்ணாமலைத் தீபம் (அண்ணாமலையார் தீபம்): திருவண்ணாமலையைப் பொறுத்தவரை, அங்கு கிருத்திகை நட்சத்திரத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது. உற்சவமே தீபத்தை மையமாகக் கொண்டது என்பதால், அஸ்தமன காலங்களில் (மாலை நேரத்தில்) என்றைக்குக் கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறதோ, அன்றுதான் அண்ணாமலையார் தீபத்தைப் பின்பற்றுவது வழக்கம். நாளை (டிசம்பர் 3) சாயங்காலம் கிருத்திகை நட்சத்திரம் வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம் என்பது  (டிசம்பர் 3, 2025) மாலையில் ஏற்றப்பட வேண்டும்.

சர்வ ஆலய தீபம்: சர்வ ஆலய தீபம் என்பது மற்ற கோவில்கள் அனைத்திலும் ஏற்றப்படுவதாகும். இது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியைப் பின்பற்றிப் பின்பற்றப்படுவதாகும். எனவே, சர்வ ஆலய தீபம் என்பது டிசம்பர் 4, 2025 அன்று ஏற்றப்பட வேண்டும்.

Related Articles

Related image1
Spiritual: குழந்தைகளாக மாறிய சிவன், விஷ்ணு, பிரம்மா.! யாரால் எப்போது தெரியுமா?
Related image2
Spiritual: வீட்டிற்கு சிவசக்தியை வரவழைக்கும் வெற்றிலை வழிபாட்டு ரகசியம்.! நினைத்ததை நடத்தி வைக்கும் தாம்பூல அதிசயம்.!
33
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
Image Credit : Asianet News

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

திருவண்ணாமலை தீபத்தைப் பின்பற்றுபவர்கள்: டிசம்பர் 3 காலையில் பரணி தீபமும், அதே நாளில் மாலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபமும், டிசம்பர் 4 ஆம் தேதி பெருமானுக்குரிய கார்த்திகை தீபமும் ஏற்ற வேண்டும். முக்கியமாக இரண்டு நாட்கள் (டிசம்பர் 3, 4) தீபம் ஏற்ற வேண்டும்.

சர்வ ஆலய தீபத்தைப் பின்பற்றுபவர்கள்: டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் பரணி தீபமும், டிசம்பர் 4 ஆம் தேதி சர்வ ஆலய கார்த்திகை தீபமும், டிசம்பர் 5 ஆம் தேதி பெருமாள் கார்த்திகை தீபமும் என மூன்று நாட்களும் தீபம் ஏற்ற வேண்டும்.

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்றாலும், இந்த இரண்டு நாட்கள் (டிசம்பர் 3 மற்றும் 4) மிக முக்கியமான தீபத் திருநாட்களாகக் கருதப்படுகின்றன.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
திருவண்ணாமலை
கோவில்
கோவில் நிகழ்வுகள்
ஏசியாநெட் நியூஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sabarimala Temple: சபரிமலையின் அற்புதமான 4 நைவேதியங்கள் எவை எவை தெரியுமா?! ஆனா பக்தர்களுக்கு 2 மட்டும்தான் கிடைக்குமாம்.!
Recommended image2
Spiritual: குழந்தைகளாக மாறிய சிவன், விஷ்ணு, பிரம்மா.! யாரால் எப்போது தெரியுமா?
Recommended image3
Spiritual: வீட்டிற்கு சிவசக்தியை வரவழைக்கும் வெற்றிலை வழிபாட்டு ரகசியம்.! நினைத்ததை நடத்தி வைக்கும் தாம்பூல அதிசயம்.!
Related Stories
Recommended image1
Spiritual: குழந்தைகளாக மாறிய சிவன், விஷ்ணு, பிரம்மா.! யாரால் எப்போது தெரியுமா?
Recommended image2
Spiritual: வீட்டிற்கு சிவசக்தியை வரவழைக்கும் வெற்றிலை வழிபாட்டு ரகசியம்.! நினைத்ததை நடத்தி வைக்கும் தாம்பூல அதிசயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved