MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன..? யாரெல்லாம் அணிய வேண்டும் தெரியுமா..?

Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன..? யாரெல்லாம் அணிய வேண்டும் தெரியுமா..?

Rudraksha Benefits: இந்து மதத்தில் ருத்ராட்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ருத்ராட்சம் என்பது சிவனின் ஒரு வடிவமாகும். அதன் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

2 Min read
Anija Kannan
Published : Oct 19 2022, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சிவ பெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானது என்பதை நம்பிக்கை. ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் ஆன்மீகம், ஜோதிடம், அறிவியல் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. அதனால் தான், சிவபெருமானின் பக்தர்கள் அதை எப்போதும் தங்கள் உடலில் அணிந்து கொள்கிறார்கள். இதை அணிவது பல பிரச்சனைகளில் இருந்து காத்து, சிந்தனையை நேர்மறையாக வைத்திருக்கும்.

 

29

குறிப்பாக, ருத்ராட்சம் அணிவதால், மன அமைதி, முன்னேற்றம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை  ஆகியவை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இன்று உலகில் 38 வகை ருத்ராட்சங்களில் 21 வகைகள் கிடைக்கின்றன.  எனவே, ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். 

மேலும் படிக்க...Amavasai Tharpanam 2022:இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது?

39


ருத்ராட்ஷம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் அதை அணியும் போது சில விஷயங்களைக் கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் உடலும், மனமும் தூய்மையாக இருக்கும். 

 திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் ஆகிய மூன்று  விஷயங்களும் இயற்கை நிகழ்வு என்பதால், இந்த நேரத்தில் ருத்ராட்ஷம் அணியலாம். இதனால், பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்பது நம்பிக்கை.

49

எப்படி அணிய வேண்டும்?

ருத்ராட்சத்தை ஒருபோதும் கருப்பு நூலில் அணிய வேண்டாம். சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நூலில் மட்டுமே அணியுங்கள். தேவையென்றால், ருத்ராட்சத்தை வெள்ளி, தங்கம் அல்லது தாமிரத்திலும் அணியலாம்.

மேலும் படிக்க...Amavasai Tharpanam 2022:இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது?

 

59

சிவபெருமான பிரசாதத்தை எப்போதும் ருத்ராட்சம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அணியுங்கள். 

ருத்ராட்ச மாலையை ஒருபோதும் 27 தானியங்களுக்கும் குறைவாக செய்ய வேண்டாம். மேலும், நீங்கள் 108 தானியங்கள் கொண்ட மாலையை அணிந்தால் சிவபெருமானின் சிறப்பு ஆசீர்வாதம் கிடைக்கும்.  

69

யாரெல்லாம் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?

ஒரு முகம்: இதை அடைவது மிகவும் கடினம். இது இறைவன் திருப்பிறப்பாக கருதப்படுகிறது இதை ஒரு பார்வை பார்த்தாலும் உங்கள் பாவங்கள் விலகும். 

இரண்டு முகம்: இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரரின் அருள் இருக்கும்.

மூன்று முகம் : இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும். 

நான்கு முகம்: இந்த ருத்ராட்சம் என்பது பிரம்மனின் வடிவம் ஆகும். ஐந்து முக ருத்ராட்சம்: காலாக்னி ருத்ராட்சத்தின் வடிவம் ஆகும்.


 

79

ஆறு முக ருத்ராட்சம்: கார்த்திகையின் வடிவம். அதை அணிந்தவர் பிரம்மத்தின் பாவத்திலிருந்து விடுபடுகிறார். 

ஏழு முகம் கொண்ட ருத்ராட்சம்: அதிசயமான  பிச்சைக்காரனை ஒரு அரசனாக்குகிறது. 

எட்டு முக ருத்ராட்சம்: பைரவத்தின் வடிவமாகக் கருதப்படும் மனிதனுக்கு முழு வாழ்க்கையையும் தருகிறது. 

ஒன்பது முக ருத்ராட்சம்: கபில்-முனியின் வடிவமாகவும்

பத்து முக ருத்ராட்சம்: பகவான் விஷ்ணுவின் வடிவமாகவும் கருதப்படுகிறது. 

பதினொரு முக ருத்ராட்சம்:  ஏகாதச ருத்ரர்களை அதி தேவதையாகக் கொண்டது. எப்போதும் சௌபாக்கியத்தை வளர்க்கும். 

89

ருத்ராட்சம் அணிந்து கொண்ட பின் செய்யக் கூடாதவை 

ருத்ராட்சம் அணியும் போது மது அருந்தக் கூடாது, புகைபிடிக்க கூடாது மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. இதன் காரணமாக, ருத்ராட்சமும் தூய்மையற்றதாகிவிடும்.

மேலும் அது உங்களுக்கு நன்மைக்கு பதிலாக பெரும் தீங்கு விளைவிக்கும்.அ ப்படி, அசைவம் சாப்பிடும் நாட்களில் ருட்ராட்ஷத்தை கழட்டி வைத்து விட வேண்டும்.

99

இறுதி ஊர்வலம் செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது. இதைச் செய்வதன் மூலம் ருத்ராட்சம் தூய்மையற்றதாகி, அது உங்கள் வாழ்க்கையில்பல்வேறு பிரச்சனைகளை தரும்.

தூங்கும் போது கூட ருத்ராட்சம் அணியக்கூடாது. ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ருத்ராட்சத்தைக் கழற்றி தலையணைக்கு அடியில் வைப்பது நல்லது. இதனால் மனம் அமைதியாக இருக்கும், நல்ல தூக்கம் வரும்.

மேலும் படிக்க...Amavasai Tharpanam 2022:இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது?

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
கோவில்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved