- Home
- Politics
- அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நெருடல் இருந்து வரும் நிலையில் அதிமுகவுடனான பேச்சு வார்த்தையில் அண்ணாமலையை கழட்டிவிட்டுள்ளது பாஜக.

2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத் தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்தவகையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் சென்னை வந்தார். சென்னை, கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தமிழக பா.ஜ.க, தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் லீலாபேலஸ் நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சந்தித்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டு, பேச்சுவார்த்தையை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை → தொகுதி ஒதுக்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடந்தது. பாஜக தரப்பில் 50 முதல் 75 தொகுதிகள் வரை கோர வாய்ப்பு இருப்பதாகவும், சிறு கூட்டணி கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கீட்டில் கணக்கிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தரப்பில் அதிகபட்சம் 60 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உடனடி முடிவு எட்டப்படவில்லை எட்டப்படவில்லை, மேலும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி உறுதியாக உள்ள நிலையில், தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இரு கட்சிகளும் திமுகவை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட தீவிரம் காட்டி வருகின்றன. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை இல்லாமல் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அமர்பிரசாத்துடன் ஆந்திராவுக்கு சென்றுள்ளார் அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நெருடல் இருந்து வரும் நிலையில் அதிமுகவுடனான பேச்சு வார்த்தையில் அண்ணாமலையை கழட்டிவிட்டுள்ளது பாஜக. அண்ணாமலை விஜயவாடாவில் கட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்.
