MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • என்னை இயக்கியதே பாஜகதான்..! உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்..!ன் இபிஎஸுக்கு எதிராக ரணகளம்..!

என்னை இயக்கியதே பாஜகதான்..! உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்..!ன் இபிஎஸுக்கு எதிராக ரணகளம்..!

ஒருவர் முன்னேற வேண்டுமானால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.

1 Min read
Thiraviya raj
Published : Nov 07 2025, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Google

‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். “என்னைப் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எடப்பாடி பழனிசாமி எனக் கூறுவது வேதனையளிக்கிறது. நாங்கள் முன்மொழியாவிட்டால் அவர் முதலமைச்சராகியிருக்கவே முடியாது.

23
Image Credit : Asianet News

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இ.பி.எஸ். சசிகலாவின் முடிவால்தான் எல்லாம் நடந்தது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் இ.பி.எஸ் சிபிஐ விசாரணை கோராதது ஏன்? எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் இ.பி.எஸ், கொடநாடு வழக்கில் மட்டும் ஏன் குரல் கொடுக்கவில்லை? இதிலிருந்து யார் திமுகவின் பி-டீம் என்பது புரியும்.

2009-ல் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் இ.பி.எஸ். உழைத்தவர்களை மறந்து பணக்காரர்களுக்கு எம்.பி. சீட் கொடுத்தவர். சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர். நான்கரை ஆண்டு ஆட்சிக்கு உதவிய பாஜகவுக்கு துரோகம் செய்தவர். தவெக கொடியைப் பார்த்ததும் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக இ.பி.எஸ் கூறுகிறார். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

Related Articles

Related image1
விஜய் கட்சி வேட்பாளர்களை 2 கோடி கொடுத்து புள்ள புடிக்கிற மாதிரி தூக்கிடும் திமுக- அதிமுக..! ஒரு சீட்டு ஜெயிப்பது கூட கஷ்டம் பாண்டே ஆருடம்
33
Image Credit : Asianet News

ஒருவர் முன்னேற வேண்டுமானால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். பாஜக தலைமை என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்கச் சொன்னது. அதன்படி பிரிந்தவர்களை ஒன்றிணைய வலியுறுத்தினேன்.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தான் எதுவும் செய்யவில்லை என்று இ.பி.எஸ் கூறுவது வேதனையளிக்கிறது. எனது ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கப்பட்டது அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்’’ என்று அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்தப் பரபரப்பு பேட்டி அதிமுக உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

About the Author

TR
Thiraviya raj
செங்கோட்டையன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved