MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • போனை போட்டு ஒரு ஆட்டு ஆட்டனும்..! சிக்கலில் மாட்டிவிட்ட ராகுல் காந்தி..! ஒவ்வொரு நிமிடமும் இளைஞருக்கு அவஸ்தை..!

போனை போட்டு ஒரு ஆட்டு ஆட்டனும்..! சிக்கலில் மாட்டிவிட்ட ராகுல் காந்தி..! ஒவ்வொரு நிமிடமும் இளைஞருக்கு அவஸ்தை..!

இந்த விஷயத்தில் காவல்துறையின் உதவியை நாட பரிசீலித்து வருகிறார். செப்டம்பர் 18, ராகுல் காந்தி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கர்நாடகாவின் ஆலண்ட், மகாராஷ்டிராவின் ராஜுராவில் வாக்குகள் நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

2 Min read
Thiraviya raj
Published : Sep 19 2025, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : ANI

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தற்போது 'வாக்கு திருட்டு' விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை குறிவைத்து குற்றம்சாட்டி வருகிறார். நேற்று, டெல்லியின் இந்திரா பவனில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பல மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி திரையில் சில மொபைல் எண்களைப் பகிர்ந்து கொண்டார். அவர்களின் வாக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்திய ஜனநாயகத்தை நாசமாக்கியவர்களை தேர்தல் பாதுகாக்கிறது என்றும் கூறினார்.

அப்போது ​ராகுல் காந்தி திரையில் ஒரு எண்ணைப் பகிர்ந்து கொண்டார். அது பிரயாக்ராஜைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இப்போது அவருக்கு நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து அழைப்புகள் வருவதால் காவல்துறையில் முறையிட பரிசீலித்து வருகிறார்.

24
Image Credit : Asianet News

பிரயாக்ராஜில் வசிக்கும் அஞ்சனி மிஸ்ரா விற்பனைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து அஞ்சனி மிஸ்ரா கூறுகையில், "ராகுல் காந்தி எனது வாக்கை ரத்து செய்ய விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் எனது மொபைல் எண்ணைச் சேர்த்து திரையில் காட்டினார். நான் வாக்கு நீக்கம் குறித்து எந்த தகவலுக்கும் விண்ணப்பிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி வருகிறேன். ராகுல் காந்தி எனது மொபைல் எண்ணை பொதுவில் வெளியிட்டதில் இருந்து, தெரியாத எண்களில் இருந்து எனக்கு அழைப்புகள் வருகின்றன. எனது எண் ஏன் இந்த முறையில் பகிரப்பட்டது? என்பது குறித்து குழப்பமடைந்தேன்’’ என்கிறார்.

Related Articles

Related image1
இரண்டே ஆப்ஷன்தான்... லாக் போடும் அமித் ஷா... ஆடிப்போய் கிடக்கும் இபிஎஸ்..! பாஜக போடும் லாபக்கணக்கு..
34
Image Credit : Asianet News

இந்த தொடர் அழைப்புகளால் அவர் கலக்கமடைந்துள்ளார். இந்த விஷயத்தில் காவல்துறையின் உதவியை நாட பரிசீலித்து வருகிறார். செப்டம்பர் 18, ராகுல் காந்தி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கர்நாடகாவின் ஆலண்ட், மகாராஷ்டிராவின் ராஜுராவில் வாக்குகள் நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி வாக்காளர்கள் குறிவைக்கப்படுவதாக ராகுல் கூறினார்.

44
Image Credit : social media

இந்த வாக்கு திருட்டு தொடர்பான கூடுதல் ஆதாரங்கள் வரும் நாட்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது என்று தேர்தல் ஆணையம் நிராகரித்தது. எந்தவொரு வாக்காளரின் பெயரையும் அவர்களை கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்று ஆணையம் தெளிவுபடுத்தியது. ஒரு வாக்கு நீக்கப்பட்டால், வாக்காளருக்கு தங்கள் வழக்கை முன்வைக்க முழு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved