- Home
- Politics
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரவாதிகள்..! அசிங்கப்படுத்தும் பாகிஸ்தான்..! ரத்தம் கொதிக்க வைக்கும் வீடியோ..!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரவாதிகள்..! அசிங்கப்படுத்தும் பாகிஸ்தான்..! ரத்தம் கொதிக்க வைக்கும் வீடியோ..!
பாகிஸ்தானில், நக்வியின் இந்த நடவடிக்கை இந்திய அணிக்கு ஒரு வலுவான எதிர்வினையாகவும், ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை இனி விளையாட்டுத் துறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

ஆசிய கோப்பை 2025 கோப்பை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்விக்கு பாகிஸ்தானில் மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்திய அணி அதை ஏற்க மறுத்த பிறகு, தனது காரில் கோப்பையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரு நபர் நக்வியைப் பாராட்டுவது போன்ற ஒரு வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அந்த நபர் இந்திய அணியை "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டுப்போஎசியுள்ளது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.
இந்தியா ஆசிய கோப்பை 2025 பட்டத்தை வென்ற பிறகு இந்த சர்ச்சை கிளம்பியது. இறுதிப் போட்டிக்குப் பிறகு கோப்பையை வழங்கும் நிகழ்ச்சி வந்தபோது, இந்திய அணி மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்தது. நக்வி கோப்பையை தனது காரில் வைத்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இப்போது வைரலாகும் வீடியோவில், ஒருவர் நக்வியை வாழ்த்தி, "அவர் மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது, இந்திய அணி கோப்பையை ஏற்கவில்லை. அவர் பொறுமையைக் காட்டினார். அவர் ஒதுங்கிச் சென்றால், நாங்கள் அதை வேறொருவரிடம் இருந்து ஏற்றுக்கொள்வோம் என்று இந்திய அணியினர் சொல்ல விரும்பினர். ஆனால் எங்கள் தலைவர், உள்துறை அமைச்சர் என்பது அவர்களுக்குத் தெரியாது. பின்னர் அவர்கள் தங்களது அணியை ஒரு பயங்கரவாதியைப் போல கையாண்டனர். கோப்பையை தனது காரில் வைத்துவிட்டு அதைத் திரும்பக் கொண்டு வந்தார் எங்கள் தலைவர்" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், நக்வியின் இந்த நடவடிக்கை இந்திய அணிக்கு ஒரு வலுவான எதிர்வினையாகவும், ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை இனி விளையாட்டுத் துறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பிசிசிஐ இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது. ஆசியக் கோப்பையை இந்தியாவிடம் திருப்பித் தர வேண்டும் என்று கோருகிறது. நக்வியிடம் இருந்து பதிலுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. அவர்களுக்கு கடிதம் கிடைக்கவில்லை என்றால், ஐசிசிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது பிரச்சினையை ராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடும்.