MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தமிழர்களை சீண்டி பார்த்தால் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆளுநரை மறைமுக தாக்கி பேசிய கனிமொழி..!

தமிழர்களை சீண்டி பார்த்தால் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆளுநரை மறைமுக தாக்கி பேசிய கனிமொழி..!

தமிழர்கள் சாதாரணமாகத் தான் இருப்பார்கள் சுரண்டிப் பார்த்தால் தீங்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என ஆளுநரை கனிமொழி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 19 2023, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கியூபா புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. 
 

24

இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கோபண்ணா, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

34

இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி: திமுக சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மறைந்த தலைவர்கள் இல்லாமல் வாழும் தலைவர்களில் யாரை சந்திக்க என்று கேட்டபோது, கலைஞர் முதலில் சொன்ன பெயர் பிடல் காஸ்ட்ரோ, அடுத்து சொன்ன பெயர் சேகுவாரா. இந்த இரண்டு தலைவர்களையும்தான் நான் சந்திக்க விரும்புகிறேன் என்றார். 

44

இன்றைய இளைஞர்கள் கூட தன் உடையில் சேகுவேராவின் படம் பொறித்த  சட்டையை அணிகிறார்கள். மற்றவர்கள் பேசக் கூடிய மொழி வேறு‌. அதில் மதம், திமிர் எல்லாம் இருக்கிறது. நம் மொழி சமத்துவம்தான். கிணற்றை காணோம் என்று சொன்னது போல ஆகிவிட்டது. நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சொன்னது  தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றெல்லாம் இங்கு எழுந்த புரட்சி தான் சொல்ல வைத்திருக்கிறது. சாதாரணமாக தமிழர்களை சீண்டி பார்த்தால் அவர்கள் அப்படியே இருந்துவிட மாட்டார்கள் என்பதற்கு சமீபத்தில் நாட்டில் நடத்திருப்பவைதான்‌ எடுத்துக் காட்டு என கனிமொழி கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
கனிமொழி
ஆளுநர் ஆர்.என். ரவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Recommended image2
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்
Recommended image3
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved