MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இன்னும் ஒரே சாதிக்குள் என்னை முடக்கப் பார்க்கிறார்..! திருமாவளவன் வேதனை..!

இன்னும் ஒரே சாதிக்குள் என்னை முடக்கப் பார்க்கிறார்..! திருமாவளவன் வேதனை..!

மானுடத்தை சிதைக்கிற அடையாளங்களாக பார்க்கிறோம். சமூக நல்லினத்தை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். ஜனநாயகத்தை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். 

1 Min read
Thiraviya raj
Published : Nov 10 2025, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

இன்னும் என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அடையாளத்துக்குள் முடக்கப் பார்க்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பேராளுமை விருது வழங்கும் விழா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தொல். திருமாவளவன், ‘‘இன்னும் என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அடையாளத்துக்குள் முடக்கப் பார்க்கிறார்.அது ஒரு சாதியவாத அரசியல். நாம் பேசுவது சாதி ஒழிப்பு அரசியல். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. நாம் ஒரு அடையாளத்டை பெற்றிருக்கிறோம் என்பது உண்மைடான். ஆனால், அந்த அடையாளத்தை சிதைக்க வேண்டும் என்று போராடுகிறோம். அதுவும் உண்மைதான்.அதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நமடு கொள்கைப்பகைவர்கள் நம்மை அந்த அடையாளத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் நிறுத்தி தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள்.

23
Image Credit : X/@thirumaofficial

அவர்கள் தன்னுடைய சாதிக் பெருமையைத் தானே பேசுகிறார்கள். உனக்காக வாக்கு வங்கி உன் சாதி தானே. உன்னை தலைவனாக ஏற்றுக் கொண்டது உன் சாதி தானே. நீ அந்த சாதிக்காக போராட வந்தவன் தானே. ஆகவே நீ அதற்குள்ளேயே இரு என்று சொல்லுகிற முயற்சி என்பதாகவே சாதிய, மதவாத சக்திகள் முயற்சியாக இருக்கிறது. நான் அந்த அடையாளங்களில் இருந்து விடுபட்டு தப்பித்து, அந்த அடையாளங்களை நாம் பிறப்பதற்கு முன்பே இருக்கிற அடையாளங்களாக பார்ப்போம் . மானுடத்தை சிதைக்கிற அடையாளங்களாக பார்ப்போம்.

33
Image Credit : F/Thirumavalavan

மானுடத்தை சிதைக்கிற அடையாளங்களாக பார்க்கிறோம். சமூக நல்லினத்தை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். ஜனநாயகத்தை சிதைக்கிற அடையாளமாக பார்க்கிறோம். ஆகவே, அந்த அடையாளங்களை ஒட்டுமொத்தமாகவே சிதைக்க வேண்டும் என்று போராடுகிற நம்மை, மறுபடியும் மறுபடியும் நம்மை அப்படி அடையாளப்படுத்த முயற்சிக்கிறபோது தான் நடுவே இருப்பவர்கள் போராடி போராடி நம்மை அந்த இடத்திற்குள் கட்டமைக்க பார்க்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
தொல். திருமாவளவன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved