MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தமிழ் நாட்டின் மோடி..! பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர்: யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்..?

தமிழ் நாட்டின் மோடி..! பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர்: யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்..?

தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ‘தமிழ்நாட்டின் மோடி’ என்று அழைக்கப்படுகிறார். 

2 Min read
Thiraviya raj
Published : Aug 17 2025, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக நாடாளுமன்ற வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பாஜக நாடாளுமன்ற வாரியக் கூட்டத்தில் தீவிர விவாதத்திற்குப் பிறகு, அவரது பெயர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. பாஜக நாடாளுமன்ற வாரியம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி பதவிக்கான பெயரை முடிவு செய்துள்ளதாக ஜே.பி.நட்டா கூறினார்.

25
Image Credit : Asianet News

சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராக பணியாற்றி வருகிறார். திருப்பூரில் 1957 ஆம் ஆண்டு மே 4 பிறந்தவர். பாஜகவின் முக்கிய தலைவராகவும், தமிழக பாஜகவின் 2004-2007 வரை மாநிலத் தலைவராகவும் இருந்தவர். தூத்துக்குடியில் உள்ள வி.ஓ.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றவர். 16 வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்துடன் தொடர்புடையவர்.

முன்பு ஜார்க்கண்ட் ஆளுநராக 2023 -2024 வரை பதவி வகித்தார். தெலங்கானா ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) மார்ச் 2024 - ஜூலை 2024) பணியாற்றினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு, மார்ச் 2024 - ஆகஸ்ட் 2024) பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஆர்.சுமதி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கைப்பந்து ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி பருவத்டில் டேபிள் டென்னிஸ் சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தவர்.

Related Articles

Related image1
வைச்ச குறி தப்பாது..! விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்..! கலக்கத்தில் கனிமொழி..!
35
Image Credit : google

1998, 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார். 1998ல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999-ல் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

2004 முதல் 2007 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார். அப்போது 93 நாட்கள், 19,000 கி.மீ. தூரம் சுற்றுப்பயணம் செய்தார். இந்திய நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி ‘ரத யாத்திரை’ மேற்கொண்டார்.

2016-2020ல் இந்திய கயிறு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி, கயிறு ஏற்றுமதியை 2,532 கோடி ரூபாயாக உயர்த்தினார்.

2020-2022ல் கேரளாவிற்கு பாஜகவின் அகில இந்திய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2004ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 58-வது அமர்வில் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியாகப் பங்கேற்று, மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை மேம்படுத்துவது குறித்து உரையாற்றினார். 2014ல் இந்திய அரசின் முதல் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக தைவானுக்கு பயணம் செய்தவர்.

45
Image Credit : our own

2012-ல், ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ‘தமிழ்நாட்டின் மோடி’ என்று அழைக்கப்படுகிறார்.

தனது தொழிலாக "SPICE" என்ற பிராண்டின் கீழ் ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்தவர். 1985-1998 காலகட்டத்தில் திருப்பூரில் இருந்து முதல் முறையாக பருத்தி நெய்யப்பட்ட துணியை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்தவர். இரண்டு நீண்ட தூர "பாத யாத்திரைகளை" மேற்கொண்டவர். மதுரையிலிருந்து கம்பம் வரை 280 கி.மீ. 14 நாட்கள் முல்லைப் பெரியாறு அணைக்காக பாதயாத்திரையை மேற்கொண்டார்.தமிழ்நாட்டின் குடியாத்தத்திலிருந்து ஆந்திராவின் குப்பம் வரை 230 கி.மீ. 11 நாட்கள் பாலாறு ஆற்றை காப்பாற்ற பாதயாத்திரை சென்றார்.

55
Image Credit : our own

இவரது சொத்து மதிப்பு 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 55.53 கோடி ரூபாய். எந்தவொரு குற்ற வழக்குகளிலும் சிக்காதவர். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

About the Author

TR
Thiraviya raj
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved