MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இனிமே பூஜை செய்ய வந்த கொலை செய்து விடுவேன்.. ஜெ. தீபா மிரட்டுறாங்க.. கதறும் போயஸ் கார்டன் பூசாரி..!

இனிமே பூஜை செய்ய வந்த கொலை செய்து விடுவேன்.. ஜெ. தீபா மிரட்டுறாங்க.. கதறும் போயஸ் கார்டன் பூசாரி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்  தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலின் பூசாரியான ஹரிஹரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Aug 16 2023, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
j deepa

j deepa

சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோவில் பூசாரி ஹரிஹரன்(42). இவர் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டிட காம்பவுண்ட அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவருடைய கணவர் மாதவனும்  தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

24

அவரது  புகாரில் 20 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தினமும் பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடன் பிள்ளையார் கோவில் மற்றும் சிவன் கோவிலில் பூஜை செய்து வருகிறேன். அதற்கான செலவு மற்றும் சம்பளத்தை மாதந்தோறும் சசிகலா கொடுத்து வருகிறார். 

34
j deepa

j deepa

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் நான் கோவிலில் பூஜை செய்ய சென்றேன். அப்போது ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 50 பேர் என்னை பூஜை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். உன்னை யார் பூஜை செய்ய விட்டது? என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என ஜெ.தீபா, மாதவன் உட்பட பலரும்  மிரட்டினார்கள்.  மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர்.

44

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெ.தீபா, மாதவன் மற்றும் அவர்களுடன் வந்த 50 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
உதயநிதி தொகுதிலயே விஜய் தான் லீடிங்.. சர்வே முடிவுகளால் கதி கலங்கும் அறிவாலயம்
Recommended image2
ராகுல், பிரியங்காவுக்கு அரசியல் அறிவே கிடையாது..! 25 மடங்கு புத்தியுள்ள தலைவர்கள் வேண்டும்..! சோனியாவின் உதவியாளர் மகன் கொதிப்பு..!
Recommended image3
நான் வயிறு எரிந்து சொல்கிறேன்.. அன்புமணிக்கு மேடையிலேயே சாபம் விட்ட ராமதாஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved