MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ADMK Survey: அதிமுகவின் ரகசியம் சர்வே..! திமுக புள்ளிகளுக்கு பொறி வைக்கும் டெல்லி..! பாஜகவின் பகீர் ப்ளான்

ADMK Survey: அதிமுகவின் ரகசியம் சர்வே..! திமுக புள்ளிகளுக்கு பொறி வைக்கும் டெல்லி..! பாஜகவின் பகீர் ப்ளான்

இது திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். மேலும் தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்தால் திமுக மீது அழுத்தம் கடுமையாக மாறி அவர்களுக்கு படுபாதகங்களை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும்.

2 Min read
Thiraviya raj
Published : Sep 25 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் தீயாக ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், தங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தற்போது ரகசிய சர்வே எடுக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நூற்று ஐம்பது தொகுதிகளில் எப்படி களம் மாறி இருக்கிறது? குறிப்பாக அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய இந்த சர்வே எடுக்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சர்வே முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிவதில் தீவிரமாக உள்ளனர். இந்த இரண்டு மண்டலங்களும் திமுகவில் வலிமையான மண்டலங்களாக இருக்கின்றன. எனவே திமுகவின் கோட்டையில் எத்தகைய சேதத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்? என்பதை கண்டுக்க வேண்டிய கட்டாயத்திலும் அதிமுக கூட்டணி இருக்கிறது. அதே நேரத்தில் இந்தக் கூட்டணி வலிமையாக இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எப்படி களம் இருக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டிய நிலை இருக்கிறது.

24
Image Credit : Asianet News

அது மட்டுமல்ல, சென்னையும் இந்த சர்வே குறியில் இருக்கிறது. எப்போதும் திமுக தான் சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருக்கிறது. திமுகவின் ஆதிக்கத்தில் இருண்நு சென்னையை விடுவிக்க வகுக்க வேண்டிய வியூகம் குறித்தும் சர்வே முடிவின் அடிப்படையில் விவாதிக்கப்பட இருக்கிறது. மிக முக்கியமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கருத்தாக கேட்கப்பட இருக்கிறது. குறிப்பாக அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரது பிரச்சாரத்தில் பேசும் விதத்தில் கூட சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். தற்போது பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் எடப்பாடி பழனிச்சாமி பேச்சை முடிக்கும் முன் ‘‘பை..பை.. ஸ்டாலின்..’’ எனச் சொல்லி முடிக்கிறார்.

Related Articles

Related image1
முப்பெரும் விழாவா நடத்துறீங்க..? தூள் தூளாக்கி காட்டுகிறேன்..! விஜய் எடுத்த கரூர் சபதம்..!
34
Image Credit : tndipr

இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? ரசிக்கிறார்களா அல்லது வேடிக்கையாக பார்க்கிறார்களா? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள நினைக்கிறது அதிமுகவின் தலைமை. சரி மக்களிடம் திமுக ஆட்சி மீது அதிருபதி இல்லை என்றால் என்ன செய்யலாம் என்ற கேள்வியும் அதிமுகவிடம் இருக்கிறது. அந்த இடத்தில் நிச்சயமாக டெல்லியில் தயவு என்பது தேவை என நினைக்கிறது அதிமுக.

இது குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘அவர்கள் பலே திட்டம் ஒன்று தயாராக கூறுகிறார்கள். அதாவது ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் துரைமுருகன், எ.வ.வேலு போன்றவர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் சில நீதிமன்ற தடைகளும் இருக்கின்றன. அதுவே வழக்கில் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவதற்கு தடையாக இருக்கிறது. எனவே அத்தகைய தடைகளை சட்டரீதியாக தகர்க்க, டெல்லி மேலிடம் நகர்வுகளை வேகப்படுத்தலாம். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவே அத்தகைய சிக்கல்களை தீர்க்க முடிவு செய்துள்ளனர். ஒருவேளை இந்த நகர்வு வெற்றிகரமாக நடந்தால் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் பாதிக்கும் மேலான அமைச்சர்கள் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

44
Image Credit : tndipr

இது திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். மேலும் தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்தால் திமுக மீது அழுத்தம் கடுமையாக மாறி அவர்களுக்கு படுபாதகங்களை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும். 2ஜி என்ற ஊழல் காரணமாக 2011ல் சென்ற ஆட்சி அதிகாரத்தை இழந்த கட்சி தான் திமுக. எனவே தேர்தல் களத்தில் எதுவும் நடக்கலாம்’’ என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved