- Home
- Lifestyle
- Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு அக்டோபர் 16ம் தேதி வரை சிறப்பு அருள் கிடைக்கும்
Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு அக்டோபர் 16ம் தேதி வரை சிறப்பு அருள் கிடைக்கும்
Sevvai Peyarchi 2022 Palangal: அக்டோபர் 16ம் தேதி வரை செவ்வாய் பெயர்ச்சியால், எந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ஜோதிடத்தின் பார்வையில், நிலம், வீடு போன்றவற்றிற்கான அதிபதியான செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி, ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்றது. இது 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதையடுத்து, வரும் அக்டோபர் 16ம் தேதி வரை செவ்வாய் இதே ராசியில் இருந்து ஆட்சி செய்வார். இதன் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசியிலும் இருக்கும். முருகனுக்கு உகந்த இந்த செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தில் இருந்து பலன்களைப் பெற கடவுள் வழிபாடு சிறந்தது. இந்த செவ்வாய் பெயர்ச்சியால், எந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்:
செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு ஏற்றம் தரும் பலன்கள் உண்டு. இது இன்னும் ஒரு மாதத்திற்கு நன்மையான வரவாக இருக்கும். எதிரிகளை வெல்ல முடியும். தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் அதிகம். பெற்றோரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைப்பதோடு, திடீர் பண வரவும் ஏற்படும்.
கன்னி:
செவ்வாய் மாற்றத்தால் கன்னி ராசிக்கு சுப பலன்கள் ஏற்படும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி, உங்களுக்கு பல தற்செயல் நன்மைகளைக் கொடுக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைப்பதோடு, திடீர் பண வரவும் ஏற்படும். பணத்தை மட்டும் பார்த்து செலவு செய்யவும்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாய் வார்த்தைகளை கட்டுக்குள் வைத்திருங்கள். செவ்வாயின் தற்போதைய நிலையால் உங்களுக்கு பண வரத்து அதிகரிக்கும். ஆனால், மனைவியின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.