MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Purattasi perumal pooja: புரட்டாசி பொறந்தாச்சு..! இன்று பெருமாள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை

Purattasi perumal pooja: புரட்டாசி பொறந்தாச்சு..! இன்று பெருமாள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை

Purattasi perumal pooja in Tamil: பெருமாளின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு, இந்த நாளில் பூஜை, வழிபாட்டு முறைகளை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 18 2022, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

புரட்டாசி மாதம் 12 மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பொன் பொருளை அள்ளி தரும் இந்த  புரட்டாசி மாதத்தை மிகவும் சந்தோஷமாக நாம் வரவேற்போம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படி, இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, பெருமாளின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு, இந்த நாளில் பூஜை வழிபாட்டு முறைகளை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

27

இதற்கு முதலில், நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி,  உங்களுக்கு பிடித்த கற்கண்டு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பெருமாளுக்கு கோடான கோடி நன்றிகளுடன் உங்களுடைய பூஜைகளை மாலை 6:00 மணிக்கு தொடங்குங்கள்.
 

37

பெருமாளுக்கு உச்சரிக்க வேண்டிய நாமம்..?

பெருமாளுக்கு மிகவும் உகந்த 'கோவிந்தா கோவிந்தா' என்ற நாமம் உச்சரிக்க வேண்டும். அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் நம் வாயிலிருந்து வரும் கோவிந்தா என்ற நாமம் நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும். அப்படி இல்லை என்றால் 'ஹரி ஹரி' என்ற நாமத்தை உச்சரிக்கலாம். தீபம் ஏற்றும் போது மட்டுமல்ல இந்த மாதம் முழுவதும் நாம் பெருமாளின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தால், கோடான கோடி புண்ணியத்தை நாம் பெற முடியும்.

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

47

உங்கள் வீட்டில் பூஜை முடித்து விட்டு,பிறகு வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் விசேஷமான பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்து கொள்ளுங்கள்.போகும் போது பெருமாளுக்கு பிடித்த வாசனை நிறைந்த பூவும் துளசி இலை மாலையும் வாங்கிச் செல்ல வேண்டும். பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

57

பெருமாள் கோவிலில் கட்டாயமாக தீர்த்தமும் துளசி இலையும் உங்கள் கையில் கொடுப்பார்கள். தீர்த்தத்தினை வீணாக்காமல் குடித்து விடுங்கள். துளசி இலைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்து உங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் பாதங்களில் வைத்து எடுத்து, பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். 

 

 

67

குறிப்பாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள் அனைவரும் இன்றைய தினம் பெருமாள் வழிபாட்டை செய்ய வேண்டும். காக்கும் பகவானான விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் அல்லவா இது. நம்மை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய விஷ்ணு பகவான் இன்றைய  தினம் மிக மிக பேரானந்தத்தில் இருப்பார். 

 

77

இந்த மாதம் முழுவதுமே பக்தர்களுக்கு பெருமாள், எந்த வரத்தைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுபவராக இருக்கிறார். ஆகவே இன்றைய தினம் அனைவரது வீட்டிலும் பெருமாளை வழிபாடு செய்து நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வைக்கும். 

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Recommended image2
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
Recommended image3
Summer Drinks: வெயிலுக்கு இதமான 6 சூப்பர் பானங்கள்! உடனே டிரை பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved